Monday, April 04, 2005

புதிய கவிதைகள்-2

நீ வரப்போவதில்லை
என்ற போதும்
இன்னொரு கோப்பையில்
கொஞ்சம் மதுவை ஊற்றுகிறேன்

எல்லாத் திரைச் சீலைகளையும்
இழுத்துவிட்ட பிறகும்
எப்படியோ கொஞ்சம்
உள்ளே வந்துவிடுகிறது
ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத
அந்தியின் நிழல்கள்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

1 comment:

Narain Rajagopalan said...

ஆஹா! இதை தான் எதிர்பார்த்தேன். நன்றாக இருக்கிறது.