Friday, April 08, 2005

புதிய கவிதைகள்-9

Image hosted by Photobucket.com


''அப்பா நீங்கள்
வீட்டிற்குப் போங்கள்
நான் எப்போதாவது வருவேன்"

மகளின்
உலர்ந்த கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்

கைப்பையை திறந்து திறந்து மூடும்
கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்

தனக்குள் முணுமுணுக்கும் உதடுகளின்
தனிமையை பார்த்துக் கொண்டிருந்தான்

கண்ணீரேயில்லாத
பிரிவுகளை பார்த்துக்கொண்டிருந்தான்

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

No comments: