Monday, September 29, 2008

நடிகர் விஜய்யின் அப்பாவிடம் கேட்ட மறக்க முடியாத கேள்வி

திரைகளுக்குப் பின்னே
தமிழ் மகன்

நான் சினிமா நிருபராகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை.
தினமணியில் திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நேரம். நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் (அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர்) ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார்.
விஜய்யின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய நேரம். `பூவே உனக்காக', `ப்ரியமுடன்', `ஒன்ஸ்மோர்' என்று படங்களின் வெற்றிப் பட்டியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் மகனுக்குத் திருமணம் வைத்திருந்தார். திருமணத்துக்கு ஆசிரியரை வரவேற்கத்தான் அவர் வந்திருந்தார்.
``பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன்.அவசியம் நீங்கள் வந்திருந்து வாழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ``இவர் எங்கள் சினிமா எடிட்டர். இவர் வருவார். எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை'' என்று என்னைக் கைகாட்டினார்.
பிறகு பொதுவாக சினிமா பற்றி பேசினார்கள். எடிட்டர் ஒரு முறை சிவாஜிகணேசனைச் சந்தித்திக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார். கிளம்பும்போது சிவாஜி ``தீர்த்தம் சாப்பிட்டுட்டுப் போறீங்களா'' என்றாராம்.
அவரும் சிவாஜிகணேசன் பற்றி ஏதோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
கிளம்பும்போது எடிட்டர் மறக்காமல் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டார், அவருடைய ஞாபக சக்தி வலுவானதாக இருந்தால்.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

வலது சாரி அரசியலின் மூன்று முகங்கள்
மாயா

இந்திய வலது சாரி அரசியலைப் பற்றிய கட்டுரையில் அத்வானி, மோடிக்கு அடுத்து அப்துல் கலாமின் பெயர் ஏன் இடம் பிடித்தது என்று பலருக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படலாம். கேட்க பொருத்தமில்லாதது அந்த பெயர் வரிசைதான் இன்று வலது சாரி அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வைத்திருக்கும் வியூகம். 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஐந்து ஆண்டுகளாக தில்லியில் நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏற்கனவே பா.ஜ.கவின் வெற்றிக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் பா.ஜ.க அதோடு திருப்தியடையவில்லை. தங்களது வனவாசத்தை முடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க ஒரு சாத்வீகமான முகம், ஒரு இந்துத்துவா முகம், ஒரு பயங்கரவாத எதிர்ப்பு முகம் என்ற மூன்றைக் கொண்டு களமிறங்குகிறது.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/


மனம் பிறந்த சட்டங்கள்
ஆர். அபிலாஷ்
இந்திய கற்பழிப்பு சட்டம் கற்பழிப்பாளர்களுக்கு பலவகைகளில் ஆதரவானது. உதாரணமாய் இதைப் படியுங்கள்.
பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம்: "ஒரு ஆண் கற்பழிப்பு அல்லது வற்புறுத்தப்பட்ட பாலுறவுக்காய் நீதிவிசாரணை செய்யப்படும்போது, குற்றத்துக்கு பலியானவர் பொதுவாய் ஒழுக்கமீறியவராய் காட்டப்படலாம்"
அதாவது பாலியல் ஒழுக்கம் மீறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை செல்லுபடியாகாது என்று இச்சட்டம் சொல்லுகிறது. இங்கு ஒழுக்கம் என்ற வார்த்தையை கவனிக்கவும்.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

ஒரு பால் உறவு: ஏனிந்த பதட்டம்?
வாஸந்தி

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில் பல சூடான விவாதங்கள் அங்கு அரசியல் பரிணாமம் பெற்றன. அதில் முக்கியமான ஒன்று ஓரினத் திருமணங்கள். காலிஃபோர்னியாவில் அப்படிப்பட்ட திருமணங்கள் நடத்த மேயர் அனுமதி அளித்தவுடன் நூற்றுக்கணக்கான ஓரின ஜோடிகள் அங்கு பதிவு செய்துகொள்ள விரைந்தார்கள். வாஷிங்டனில் இருந்த ரிபப்ளிகன் அரசு அரண்டு போயிற்று. கிறித்துவ மதகுருமார்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஓரின உறவே தவறு என்கையில் ஓரின திருமணத்தை எப்படி அனுமதிப்பது? 'மீண்டும் ஜனித்த கிறித்துவர்" என்று சொல்லப்படும் அதிபர் புஷ் இத்தகைய திருமணங்கள் இயற்கைக்கு விரோதமானவை என்றார். திருமண பந்தம் பதிவு செய்யப்பட்டாலே அமெரிக்காவில் அன்றாட வாழ்விற்கு சௌகர்யம். சில சலுகைகள் உண்டு. அதனாலேயே ஓரின் உறவு வைத்து குடும்பம் செய்பவர்கள் அதை முறைப்படி சட்டப்பதிவு செய்து கொள்ள ஆர்வப்பட்டார்கள். அங்கு ஓரின உறவுகளின் இருப்பு ஓரளவுக்குப் பழகிப்போன விஷயமாக ஏற்கப்பட்டிருந்தாலும் சகஜமான விஷயம் இல்லை. பழமைவாதிகள் அதை அங்கீகரிக்க இன்றும் மறுத்து வருவது வியப்பில்லை. முற்போக்கு வாதிகளாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் ஜனநாயக வாதிகளும் அதை முழுமையாக ஏற்கவில்லை.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

முகேஷ் அம்பானி-அனில் அம்பானி: அபூர்வ சகோதரர்கள்
மனோஜ்
போட்டுக் கொடுப்பதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நேரடியாக போட்டுக் கொடுப்பது. மற்றொன்று, போகிறபோக்கில் நாசூக்காக போட்டுக் கொடுப்பது. முகேஷ் அம்பானி இரண்டாம் வகை. அவர் போட்டுக் கொடுத்தது தன் தம்பியைத்தான். எங்கே, எதற்கு என்று போவதற்கு முன் உலகின் பணக்கார சகோதரர்களின் குடும்பக் கதைக்குள் கொஞ்சம் சென்று வரலாம். இந்தியாவின் மிகப்பெரும் பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய திருபாய் அம்பானியின் செல்ல புதல்வர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. அப்பாவிடம் அமைதியாக அடங்கி, ஒடுங்கி மும்பையில் வளர்ந்தவர்கள்


தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

இன்னும் பல சிறப்பு ஆக்கங்களுடன்

இந்த வார உயிரோசை இதழ் உங்களுக்காக.........................
http://www.uyirmmai.com/

Wednesday, September 24, 2008

ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

ரஜினி தமிழக அரசியல் களத்திற்குத் தயாராவதற்காக பேவரைட் ஜோதிடர்களை நாடுகிறார், வட இந்தியாவில் எல்.கே.அத்வானி தனக்குரியது என்று கருதும் பிரதமர் நாற்காலிக்குத் தயாராவதற்காக ஜோதிடர்களை நாடுகிறார். திராவிடச் சூரியனின் குடும்பத்தினர் உள்பட பல அரசியல்வாதிகளும் ஜோதிடர்களின் மந்திராலோசனையைப் பெறுவது வழக்கம் என்றாலும் ரஜினி ஒரு வலதுசாரி அரசியல்வாதியாகத்தான் வருவார் என்று அவர் நெற்றியில் எழுதி ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற வலதுசாரி இயக்கங்கள் எதுவும் வலுவாகக் காலூன்றியதில்லை என்ற நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் சூழலில் இந்துத்துவ சக்திகளுக்கு ஒரு அபாயகரமான வலுவைக் கொடுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தங்களது இந்துத்துவ அரசியலை முன்னிறுத்த அவர்களுக்கு ஒரு சரியான வசீகரமிக்க தலைவர் கிடைத்தால் அது வெறும் கையை சுற்றிக்கொண்டிருப்பவன் கையில் ஒரு போர் வாளைக் கொடுப்பதற்குச் சமம்.

- சஞ்சித்

.

முழுமையாக படிக்க
வாருங்கள் உயிரோசை இந்த வார இதழுக்கு...

http://www.uyirmmai.com/

Tuesday, September 23, 2008

சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்


சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்...

தமிழவன்


பாரதியாருடைய காலத்தில் சங்க இலக்கியம் ஓரளவு பரவி எல்லோர் கவனத்தையும் கவர்ந்தாலும் பெரும்பான்மை பிராமணர்களைப் போல பாரதியும் சங்க இலக்கியத்தால் பாதிப்படையவில்லை. அவருடைய காலத் தமிழ் முழுசும் சங்க இலக்கியத்தால் பாதிப்பு அடையவில்லை. பாரதி தாசன் எப்படித் தன் இலக்கியத்தை முழுமையாய் சங்க இலக்கியத்துக்குள் கொண்டுவந்தாரோ அந்த அளவு பாரதியைச் சங்க இலக்கியப் படிப்பு பாதிக்காத சூழல் அன்று இருந்திருக்கிறது. ஆனால் பாரதி காலம் வரை தமிழில் இல்லாத அனைத்திந்தியா, ஒரு சிந்தனைச் சட்டகமாய்த் தமிழிலக்கியத்தில் பாரதி காலத்தில் வருகிறது. இதற்கு இலக்கியக்காரணம் இல்லை; அரசியல் காரணம் இருக்கிறது. சுதந்திரப் போர் தமிழில் அதுவரை இல்லாத ஒரு விஷயத்தை - அனைத்திந்தியாவை - கொண்டுவந்து சேர்க்கிறது. காங்கிரஸ் கட்சி 1967-ல் தமிழகத்தில் வேரறுக்கப்பட்டதற்கும் அன்றிலிருந்து தமிழ்ப்பண்பாட்டை அது பாதிக்காத ஒரு வடநாட்டுக் கட்சியாகவே தொடந்து மிளிர்வதற்கும் ஆழமான பண்பாட்டுக் காரணம் இருக்கிறது. எல்லோரும் அரசியல் காரணம் என்று கருதினாலும் அது அரசியல் காரணமல்ல; பண்பாட்டுக் காரணம்- அதாவது சங்க இலக்கியம் தன்னைத் தமிழ் மண்ணில் நிலைநிறுத்திய செயல்தான் 1967-இலிருந்து காங்கிரஸ் பண்பாட்டைத் தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தது. 1905 வாக்கில் பாரதிமூலம் தொடங்கப்பட்ட ஒரு - அனைத்திந்திய - அடையாளத்தை, சங்க இலக்கியம் கடந்த சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாற்றியுள்ளது. இதற்கு மாற்றான அனைத்திந்திய பிரதேசங்களின் பண்பாட்டைக் கொண்டு வரும் அனைத்தியக் கடமையைச் செய்யாததே திராவிடக்கட்சிகளின் அனைத்திந்தியத் தோல்வி. முரசொலி மாறனை அவருடைய மாநில சுயாட்சி என்ற சிறப்புப்புத்தகம் சார்ந்து நினைவுநாள் கொண்டாடாமல் வேறு முறையில் கொண்டாடியபோதே திராவிடச் சிந்தனை இந்திய அரசியலில் உயர்ந்தோர் எதிர்பார்த்த பயனைத் தராமல் தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது தெரிந்தது. ஓரளவு வி.பி. சிங் மூலமும், மாயாவதி மூலமும் திராவிடச்சிந்தனைகள் அனைந்திந்தியாவுக்கும் போன ஆரம்பக்கட்டம் முடிந்துவிட்டது போலுள்ளது

முழுமையாக படிக்க
வாருங்கள் உயிரோசை இந்த வார இதழுக்கு...
http://www.uyirmmai.com/

Sunday, September 14, 2008

தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்


டைம்ஸ் ஆஃப் இந்தியா இன்று helpless? என்ற தலைப்பில் தில்லி குண்டுவெடிப்புகள் பற்றிய செய்தியினை வெளியிட்டிருக்கிறது. இந்த தலைப்பின் பின் இருக்கும் அச்சமும் நம்பிக்கையின்மையும் நாடு முழுக்க பரவிவரும் பீதியின் அடையாளங்களே. இது தொடர்கதையாகிவிட்டது. மீண்டும் அப்பாவிகளும் எளிய மக்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். நடைபாதையில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொல்லபட்ட பின்பு எஞ்சிய ஒருவர் கேட்கிறார் நாங்கள் என்ன தவறு செய்தோம்?' என்று.
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். ஏதோ இது சட்ட ஒழுங்கு பிரச்சினை என்பதுபோல. இந்த அபத்தமான பல்லவி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின்போதும் பாடப்படுகிறது. இந்த பயங்கரவாத வலைப் பின்னலை கண்டுபிடிக்க முடியாத மொத்த அரசு அமைப்பின் தோல்வியை கொடூரமான சட்டங்களை இயற்றுவதன் வாயிலாக தடுத்து நிறுத்தமுடியாது. இந்தக் குற்றங்களை இழைப்பவர்களின் தொடர்புகளும் அதற்கு பின் இருக்கும் மனோபாவமும் எல்லா சட்டரீதியான அச்சுறுத்தல்களையும் கடந்தவை.....

இக்கட்டுரையை தொடர்ந்து வாசிக்க வாருங்கள் உயிர்மை இணைய தளத்தின் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு...

http://www.uyirmmai.com/

தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்


Tuesday, September 09, 2008

உயிரோசை இந்த வார இதழில்...

உயிர்மை.காம் வழ்ங்கும் உயிரோசை வார இதழ் தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளின் பங்களிப்புகளோடு செப்டம்பர் 1 முதல் வெளிவந்துகொண்டிருக்கிறது. திங்கள்கிழமை தோறும் பதிவேற்றம் செய்யப்படும் உயிரோசையின் இரண்டாம் இதழில் பின்வரும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. சிந்தனைக்கும் வாசிப்பனுபவத்திற்குமான ஒரு முழுமையான வார இதழ் உயிரோசை.

http://www.uyirmmai.com/

உயிரோசை 8.9.2008 இதழில்..............


கட்டுரை
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
அரங்கத்தின் விளக்குகளெல்லாம் அணையவும் நம் முன்னால் இருக்கும் வெள்ளித் திரையில் நம்முடைய முழு எதிர்பார்ப்புகளும் குவியவும் செய்கிற அந்த நிமிடத்துக்கு இணையாக வேறொன்றும் கிடையாது என்று சொல்கிறார் பிரபல திரைப்பட விமரிசகியான பவுலின் கீல். நிஜம்தான். அதுபோல வேறொரு நிமிஷம் இல்லைதான். சினிமா போல வேறொரு அனுபவமும் இல்லை.
-சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
பருவக் கால ஓட்டத்தால் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் கோஸி நதி இந்த வருடம் ஏற்படுத்திய அழிவை, துயரம் என்று சாதாரணமாக வகைப்படுத்த முடியாது. இமய மலையிலிருந்து வட இந்தியாவின் சமவெளிக்குக் கிழக்கு பீகார் வழியாகச் செல்லும் தனது வழக்கமான பாதையிலிருந்து விலகி சற்றும் சம்பந்தமில்லாத மேற்கு பீகாரில் புகுந்து, வீடுகள், வயல்கள் வழியாக தனக்குப் புதிய பாதை அமைத்துக்கொண்டு கடலைத் தேடி ஓடுகிறது கோஸி. அதன் பாதையிலிருந்து பெரும்பாலான மனித நாகரிகத்தின் தடங்கள் துடைத்தகற்றப்பட்டுவிட்டன.
-மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
பிரித்தனில் புகலிடம் தேடிய சல்மான் ருஷ்டியின் பாதுகாப்புக்காக பிரித்தானிய அரசு நியமித்த பாதுகாப்புப் படையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் இவான்ஸ். அந்த அனுபவங்களைத்தான் புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. அதில் தன்னைப் பற்றி எழுதியிருப்பவை அவதூறுகள்; தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கமேற்படுத்தும் நோக்கத்தில் இட்டுக்கட்டியவை. தன்னுடைய ஆளுமையை அவமதிக்கும் வகையில் கற்பனையான தகவல்களால் திணிக்கப் பட்டவை. இது ருஷ்டியின் வாதம்.
-சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
இந்தியா 'மகத்தான' வெற்றி பெற்றிருக்கிறது. அணு எரிபொருள் வாங்க 34 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கிவிட்டது. 45 நாடுகள் கூட்டமைப்பு பெரிய மனது வைத்து அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. இனி அணு உலைகளில் எரிபொருளைப் போட்டு மின்சார உற்பத்தியை பெருக்கி நாட்டை ஜொலிக்கச் செய்யலாம். அப்புறம் மெதுவாக வல்லரசாகி விடலாம்.
சமீபத்தில் இத்தனை திடுக்கிடும் திருப்பங்களுடன் எந்த உலக நிகழ்வும் நடந்ததில்லை.
-மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு விவாகரத்துக் கோரிக்கையை நிராகரித்த வழக்கு அதற்குச் சரியான உதாரணம். பதினாறு ஆண்டுகளாக நரேந்திர குமார் வர்மா என்ற நபர் தன் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருபவர். மணவாழ்வு முறிந்து ஒரு தம்பதி பத்தாண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்திருந்தால் விவாகரத்துப் பெறுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும் என்றுதானே நாம் நினைப்போம்? அதுதான் இங்கு இல்லை. இந்திய விவாகரத்துச் சட்டத்தின்படி, தம்பதிகளின் பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் போனால் விவாகரத்து கிடைப்பது, எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், மிகச் சிக்கலான விஷயம். வர்மாவின் மனைவி விவாகரத்துக்கு ஒப்பாததால் நிலுவையில் இருக்கும் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிற்று என்றாலும் கால இடைவெளியைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் முடிவுக்கு வராதது பகுத்தறிவுக்கு விரோதமானதாக எனக்குப்படுகிறது.
-வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
சின்னப் பிள்ளைகள் குறும்பு செய்யும்போது, 'பூச்சாண்டி' கிட்டே பிடிச்சுக் கொடுத்துடுவேன் என மிரட்டுற குரலை கிராமங்களில் அடிக்கடி கேட்கலாம். யார் அந்தப் பூச்சாண்டி? ஆள் எப்படி இருக்கும்? என்று யோசிப்பதைவிட அரூபமாக மனத்தில் தோன்றும் பயம்தான் குழந்தையைப் பாடாய்ப் படுத்தும். அப்படி இன்னொரு பெயர்தான் 'பள்ளிக்கூடம்'.
-ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாய் நெசவு என்ற தொழிலும் இன்று இயந்திரமாகிவிட்டதால் வீட்டில் தறிப்போட்டு பாய்களை நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இன்று வேலை இன்றி தெருவில் நிற்கிறார்கள். தென்மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்களே பெரும்பாலும் பாய் நெசவுத்தொழிலைச் செய்து வந்தார்கள்.
-கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
-அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
-ஜெயந்தி சங்கர்
சிறுகதை
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
-கே.பாலமுருகன்
கவிதை
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
-கோகுலன்
பசித்தலையும் சுயம்
-எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
-செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
-த.அரவிந்தன்
மெளனத்தின் மொழி
-றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
-ஆலன் ஸ்பென்ஸ்
அறிவிப்புகள்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
--
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
-இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
--
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
--
பழமொழிகளும் சொலவடைகளும்
பழமொழிகளும் சொலவடைகளும்
அச்சாணி இல்லாத தேர்; முச்சாணும் ஓடாது.
அஞ்சாவது (பிறக்கும்) பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
-கழனியூரான்
நிகழ்வுகள்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
--
கடித இலக்கியம்
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
இந்தத் தொகுப்பைப் படித்து முடித்ததும் சுஜாதாவின் இதற்கான முன்னுரையைப் படித்தேன். உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை இந்தத் தொகுதியின் பின் பகுதியிலும் கனவு இதழிலும் படித்தேன். செகாவுக்கு எதிர்மறையாக எப்படி அசோகமித்திரனும் அவர் போன்று எழுதுபவர்களும் படைக்கிறார்கள் என்று மழுப்பலாக எழுதிய க.நா.சு. வின் விமர்சனம் ஒன்றை தினமணியில் படித்தேன். அப்புறம் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
-கந்தர்வன்
சிற்றிதழ் பார்வை
புத்தகம் பேசுது
--
புது நூல்கள்
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
-தாஜ்
உங்கள் கருத்துக்கள்
உங்கள் கருத்துக்கள்
-எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com

Saturday, August 09, 2008

ஒரு பால் உறவுக்கு சட்ட அங்கீகாரம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் முதல்முறையாக பாராட்டிற்குரிய நவீன சிந்தனையுடைய ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். நேற்று மெக்சிகோவில் நடந்த சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய அவர் 'ஒரு பால் உறவினை சட்டபூர்வமாக்கும் முயற்சிகளுக்கு எல்லா உதவிகளும் செய்யப்போவதாக குறிப்பிட்டார். இந்திய அரசின் சார்பில் ஒரு அமைச்சர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இந்தக் கட்டுரையின் முழு வடிவம் உயிர்மை.காம் மனுஷ்யபுத்திரன் பக்கங்களில்...http://www.uyirmmai.com/

Wednesday, August 06, 2008

சைக்கோ கொலைகாரன் யார்?

சென்னையில் கடந்த சில வாரங்களாக இரவுக் காவலாளிகள், மற்றும் தெருக்களில் தூங்குபவர்கள் பலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருவது ஒரு திகில் கதையாக மாறிவிட்டது. இந்த திகில் கதையின் வசனங்களின் ஒரு பகுதி ஊடகங்களாலும் இன்னொரு பகுதி போலீஸாராலும் எழுதபட்டு வருகிறது. 'சைக்கோ கொலைகாரன்' என்ற ஒரு கற்பனை பாத்திரத்தைத் தேடி மொத்த நகரமும் அலைந்து கொண்டிருக்கிறது. குற்றத்தின் பின்னே இருக்கும் நோக்கங்கள் அல்லது ஆதாயங்கள் வெளிப்படையாகத் தெரியாத குற்றங்கள் அனைத்தும் உளவியல் சார்ந்த மர்மக் குற்றங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில் ஒரு 'சைக்கோ கொலைகார'னின் கதாபாத்திரம் இல்லாவிட்டால் குற்றம் குறித்த எல்லாக் கற்பிதங்களும் கலைந்துவிடும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரி மொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்றதாக்கிவிடுகிறான். மிகக் கொடூரமான குற்றவாளி என்று அறியப்பட்ட ஒருவனது இலக்குகள் குறித்துக்கூட உத்தேசங்கள் இருக்கின்றன. ஆனால் நிழல் குற்றங்கள், அறியப்படாத நோக்கங்கள் கொண்ட குற்றங்கள் ஏற்படுத்தும் பதட்டம் மொத்த சமூகத்தையும் நோய்க்கூறு கொண்டதாக்கிவிடுகிறது. பீதியையும் பிறர்மீதான அச்சத்தையும் ஊட்டி வளர்க்கும் இனவாத மதவாத அமைப்புகளாகட்டும், ஊடகங்களாகட்டும் அவை ஒரு சமூகத் திரளுக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுகின்றன. இந்த உலகின் மிகப் பெரிய கொலைக் கருவி எதுவென்றால் அது அச்சம்தான். அச்சத்தினால் பிறழ்வு கொண்ட ஒரு தனிமனிதனின், சமூகத்தின் பிறருக்கு எதிரான குற்றங்கள் தடுத்து நிறுத்த முடியாதவை. ..........

இந்தக் கட்டுரையை தொடந்து வாசிக்க உயிர்மை.காம் மனுஷ்யபுத்திரன் பக்கங்களுக்கு வாருங்கள்.....http://www.uyirmmai.com/


Monday, August 04, 2008

கடற்கரையில் சில காகங்கள்

கடற்கரைகள் பொழுதுபோக்கிற்கான இடமாக மாறிய பிறகு கடல் கரையிலிருந்து வெகுதூரம் பின்னகர்ந்துவிட்டதாக தோன்றுகிறது. சென்னை கடற்கரைகளில் அலைமோதும் கூட்டம் மூச்சுத் திணற வைக்கிறது. கடல் காற்று போதாமல் ஆகிவிடுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை எல்லியட்ஸ் பீச்சிற்கு சென்றிருந்தேன். தி.நகர் ரங்கநாதன் தெருவைவிட கடுமையான கூட்டம். வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான வரிசை முடிவற்று நீண்டிருந்தது. எங்கெங்கும் மனிதத் தலைகள். செல்போன் சிக்னல்கள் ஜாம் ஆகியிருந்தன. காரணம் பீச் வாலிபால். அதற்கு முந்தைய தினங்களில் பத்திரிகைகள் பந்துகளை அடிக்க பறக்கும் பெண்களின் கவர்ச்சியான படங்களை வெளியிட்டிருந்தன. வழக்கமான தின்பண்ட வியாபாரிகளுடன் குடை ராட்டினக்காரர்கள், பலூன் விற்பவர்கள் என திருவிழா வெளியாகியிருந்தது. ஆஹா FMமிலிருந்து நேரடி விநாடி வினா நிகழ்ச்சிகள் ஒலிப்பெருக்கியில் அதிர்ந்துகொண்டிருந்தன. . ஒரு எட்டுவயது சிறுமி கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரிய அவளது தகப்பனோ அல்லது வேறு யாரோ காசு வாங்கிக்கொண்டிருந்தார். குரங்கு வித்தை காட்டுபவனும் குரங்கும் கண்களில் பஞ்சடைந்து சோர்ந்து நடந்துகொண்டிருந்தார்கள். ஏராளமான பையன்கள் ஏராளமான பெண்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏராளமான பெண்கள் ஏராளமான பையன்களால் தாங்கள் பார்க்கப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்கெங்கும் தற்காலிகமான சிறு கடைகள்....................

கட்டுரையை முழுமையாக படிக்க உயிர்மை வலைத் தளத்தில் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு... http://www.uyirmmai.com/

Thursday, July 31, 2008

ரஜினி கற்றுக்கொண்ட பாடம் என்ன?

ரஜினி காந்த் பற்றிய ஏதேனும் ஒரு பரபரப்பு என்பது வழக்கமான ஒரு நடைமுறையாகிவிட்டது. இன்று குசேலன் படம் திரைக்கு வருவதை முன்னிட்டு அவரது ஒக்கேனகல் பிரச்சினை தொடர்பான கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன. இதைப் பற்றிய ஒரு பதிவு இன்று உயிர்மை.காமில் மனுஷ்ய புத்திரன் பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக ரஜினிகாந்த்தை புரிந்துகொள்வது பற்றி இப்பதிவு பேசுகிறது.
பார்க்க: www.uyirmmai.com

Friday, March 07, 2008

www.uyirmmai.com

விரைவில்
www.uyirmmai.com
தமிழில் ஒரு முழுமையான இணைய இதழ்
முழு விப‌ர‌ங்க‌ள் விரைவில்............