Saturday, August 09, 2008

ஒரு பால் உறவுக்கு சட்ட அங்கீகாரம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் முதல்முறையாக பாராட்டிற்குரிய நவீன சிந்தனையுடைய ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். நேற்று மெக்சிகோவில் நடந்த சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய அவர் 'ஒரு பால் உறவினை சட்டபூர்வமாக்கும் முயற்சிகளுக்கு எல்லா உதவிகளும் செய்யப்போவதாக குறிப்பிட்டார். இந்திய அரசின் சார்பில் ஒரு அமைச்சர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இந்தக் கட்டுரையின் முழு வடிவம் உயிர்மை.காம் மனுஷ்யபுத்திரன் பக்கங்களில்...http://www.uyirmmai.com/

Wednesday, August 06, 2008

சைக்கோ கொலைகாரன் யார்?

சென்னையில் கடந்த சில வாரங்களாக இரவுக் காவலாளிகள், மற்றும் தெருக்களில் தூங்குபவர்கள் பலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருவது ஒரு திகில் கதையாக மாறிவிட்டது. இந்த திகில் கதையின் வசனங்களின் ஒரு பகுதி ஊடகங்களாலும் இன்னொரு பகுதி போலீஸாராலும் எழுதபட்டு வருகிறது. 'சைக்கோ கொலைகாரன்' என்ற ஒரு கற்பனை பாத்திரத்தைத் தேடி மொத்த நகரமும் அலைந்து கொண்டிருக்கிறது. குற்றத்தின் பின்னே இருக்கும் நோக்கங்கள் அல்லது ஆதாயங்கள் வெளிப்படையாகத் தெரியாத குற்றங்கள் அனைத்தும் உளவியல் சார்ந்த மர்மக் குற்றங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில் ஒரு 'சைக்கோ கொலைகார'னின் கதாபாத்திரம் இல்லாவிட்டால் குற்றம் குறித்த எல்லாக் கற்பிதங்களும் கலைந்துவிடும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரி மொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்றதாக்கிவிடுகிறான். மிகக் கொடூரமான குற்றவாளி என்று அறியப்பட்ட ஒருவனது இலக்குகள் குறித்துக்கூட உத்தேசங்கள் இருக்கின்றன. ஆனால் நிழல் குற்றங்கள், அறியப்படாத நோக்கங்கள் கொண்ட குற்றங்கள் ஏற்படுத்தும் பதட்டம் மொத்த சமூகத்தையும் நோய்க்கூறு கொண்டதாக்கிவிடுகிறது. பீதியையும் பிறர்மீதான அச்சத்தையும் ஊட்டி வளர்க்கும் இனவாத மதவாத அமைப்புகளாகட்டும், ஊடகங்களாகட்டும் அவை ஒரு சமூகத் திரளுக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுகின்றன. இந்த உலகின் மிகப் பெரிய கொலைக் கருவி எதுவென்றால் அது அச்சம்தான். அச்சத்தினால் பிறழ்வு கொண்ட ஒரு தனிமனிதனின், சமூகத்தின் பிறருக்கு எதிரான குற்றங்கள் தடுத்து நிறுத்த முடியாதவை. ..........

இந்தக் கட்டுரையை தொடந்து வாசிக்க உயிர்மை.காம் மனுஷ்யபுத்திரன் பக்கங்களுக்கு வாருங்கள்.....http://www.uyirmmai.com/


Monday, August 04, 2008

கடற்கரையில் சில காகங்கள்

கடற்கரைகள் பொழுதுபோக்கிற்கான இடமாக மாறிய பிறகு கடல் கரையிலிருந்து வெகுதூரம் பின்னகர்ந்துவிட்டதாக தோன்றுகிறது. சென்னை கடற்கரைகளில் அலைமோதும் கூட்டம் மூச்சுத் திணற வைக்கிறது. கடல் காற்று போதாமல் ஆகிவிடுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை எல்லியட்ஸ் பீச்சிற்கு சென்றிருந்தேன். தி.நகர் ரங்கநாதன் தெருவைவிட கடுமையான கூட்டம். வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான வரிசை முடிவற்று நீண்டிருந்தது. எங்கெங்கும் மனிதத் தலைகள். செல்போன் சிக்னல்கள் ஜாம் ஆகியிருந்தன. காரணம் பீச் வாலிபால். அதற்கு முந்தைய தினங்களில் பத்திரிகைகள் பந்துகளை அடிக்க பறக்கும் பெண்களின் கவர்ச்சியான படங்களை வெளியிட்டிருந்தன. வழக்கமான தின்பண்ட வியாபாரிகளுடன் குடை ராட்டினக்காரர்கள், பலூன் விற்பவர்கள் என திருவிழா வெளியாகியிருந்தது. ஆஹா FMமிலிருந்து நேரடி விநாடி வினா நிகழ்ச்சிகள் ஒலிப்பெருக்கியில் அதிர்ந்துகொண்டிருந்தன. . ஒரு எட்டுவயது சிறுமி கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரிய அவளது தகப்பனோ அல்லது வேறு யாரோ காசு வாங்கிக்கொண்டிருந்தார். குரங்கு வித்தை காட்டுபவனும் குரங்கும் கண்களில் பஞ்சடைந்து சோர்ந்து நடந்துகொண்டிருந்தார்கள். ஏராளமான பையன்கள் ஏராளமான பெண்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏராளமான பெண்கள் ஏராளமான பையன்களால் தாங்கள் பார்க்கப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்கெங்கும் தற்காலிகமான சிறு கடைகள்....................

கட்டுரையை முழுமையாக படிக்க உயிர்மை வலைத் தளத்தில் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு... http://www.uyirmmai.com/