Tuesday, March 10, 2009

கண்ணிவெடிகளின் ஊடே: ஒரு துய்ரக் கதை

வாழ்க்கைச் சித்திரம்:வானத்தின் மறுபக்கம்

அமெரிக்காவிலுள்ள ஏ. பி. சி. நியூஸ் - குட்மார்னிங் அமெரிக்கா (ABC News--Good Morning America) தொலைக்காட்சியும், சைமன் - சஸ்டர் (Simon-Schuster) பதிப்பகமும் இணைந்து, கடந்த 2005-ஆம் ஆண்டு தனது வாசகர்களுக்காக அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்த கட்டுரைப் போட்டியொன்றை அறிவித்தது. இக்கட்டுரைப் போட்டிக்காக சுமார் 6000 கட்டுரைகளும் மற்றும் 20000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஈர்ப்பான உண்மைக் கதைகளும் வந்தடைந்திருக்கின்றன. இறுதியில் நடுவர் குழுவினர், பெட்டி பர்கி யூஸன், மெர்ஸிடஸ் ஃபுளோரன் ஷியா புரூட்நிக்கி மற்றும் ஃபாரா அஹ்மதி ஆகிய மூன்று நபர்கள் எழுதியிருந்த படைப்புகளைச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்து, வாசகர்களின் வாக் கெடுப்புக்கு விட்டனர். வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், ஃபாரா அஹ்மதி யின் வாழ்க்கைக் கதை சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘The Other side of the sky’ என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஃபாரா அஹ்மதி.. தன்னுடைய ஏழாவது வயதில், கன்னிவெடி விபத்தொன்றில் தன் இடது காலை இழந்த ஃபாராவின் குழந்தைப்பருவம் பெரும் அச்சங்களும், சோகங்களும் நிறைந்தவை. தனது சகோதரர்கள் இருவரைத் தொலைத்ததோடு, தனது தந்தையையும், சகோதரிகளையும் வெடிகுண்டு விபத்தில் இழந்த ஃபாரா, தற்போது தன் அம்மாவோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார். The other side of the sky என்கிற அந்தப் புத்தகச் சுருக்கத்தின் தமிழாக்கமே இந்தக் கட்டுரை.

தொடர்ந்து வாசிக்க

http://www.uyirmmai.com/


கரை மீண்ட காந்தி-இந்த வார உயிரோசையில்..

கடந்த வெள்ளிக்கிழமை காந்தியின் பொருட்கள் ஏலத்துக்கு வந்தன. 364ஆவது அயிட்டமாக இது ஏலத்துக்கு வந்தது. அப்போது காந்தி குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச கேட்புத் தொகையாக ரூ. 15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்களும் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ‘சிண்டிகேட்’ அமைத்து ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு இந்தியருக்கு எதிராக வேறு யாரும் ஏலம் கேட்கக் கூடாது என்று சிண்டிகேட்டில் நிபந்தனை போட்டு ஏலத் தொகை உயர்வைக் கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனால் ஏலம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் இந்தக் கட்டுப்பாடு எல்லாம் தகர்ந்து மில்லியனில் எகிறியது. லண்டனிலிருந்து ஒருவர் ரூ. 8.75 கோடிக்கு ஏலம் கேட்டார். திடீர் திருப்பமாக பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் டோனி பேடி என்பவர் ரூ. 9.3 கோடிக்கு காந்தியின் பொருட்களை ஏலத்தில் எடுத்து இந்தியர்களின் ‘மானத்தை’ காத்தார். சட்ட சிக்கல்கள் இருப்பதால் காந்தியின் பொருட்கள் இரண்டு வார காலத்துக்கு ஏல நிறுவனத்திடமே இருக்கும். அதன்பின்னர் மல்லையாவிடம் அது ஒப்படைக்கப்படும்

கட்டுரையை முழுமையாக வாசிக்க...இன்னும் ஏராளமான புத்தம் புதிய கட்டுரைகளுடன் http://www.uyirmmai.com/uyirosai/