Tuesday, July 21, 2009

சாருவுக்கு ஒரு கடிதம்

மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் படித்தேன். தமிழில் இப்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் விவரமானவர்கள் என்று நான் கருதும் இரண்டுபேரில் நீங்களும் ஒருவர். என்னை ஒரு சிவாஜி ரசிகன் எனக் கண்டுபிடித்த முதல் ஆள் நீங்கள்தான் என்பதால் எனது கருத்து உறுதிப்படுகிறது. பொதுவாக சிவாஜி ரசிகன் என்று சொன்னால் நவீன இலக்கியச்சூழலில் மதிக்கமாட்டார்கள். அதனால் இந்த உண்மையை இவ்வளவு காலம் கட்டிக் காப்பாற்றி வந்தேன். நீங்கள் அதைக் கண்டுபிடித்தீர்கள் என்பதைவிட அம்பலப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லலாம். பெரும்பாலான சிவாஜி படங்களில் சிவாஜி உணர்வுபூர்வமான உறவுகளில் தோற்கடிக்கப்படுவார். அவரது வெற்றிபெற்ற அநேகப்படங்களில் அவர் மனம் கசந்துவெளியேறிச் செல்லும் பாத்திரங்களையே ஏற்றிருக்கிறார். சினிமாவிலும் வாழ்க்கையிலும் சிவாஜிகணேசன்களின் நிலை எப்போதும் அதுதான். உங்கள் பதிவு வெளிவந்ததும் பல நண்பர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள்

‘சாருவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?’

‘ஒரு பிரச்சினையும் இல்லையே.’

‘சாரு ஆன்லைனில் உங்களைத் திட்டி எழுதியிருக்காரே.’

‘அப்படியா.. நான் படிக்கலையே.’

‘அதாங்க... மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும்’

‘ஓ.. அதுவா...அதுல திட்டி எதுவும் இருக்கறதா தெரியலையே.’

‘சும்மா நடிக்காதீங்க...’

‘நான் ஏங்க நடிக்கணும்?’

‘இல்ல நீங்கள் ரெண்டுபேரும் பேசிவச்சுகிட்டு இதையெல்லாம் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன்.’

இது ஒரு சாம்பிள் உரையாடல்

தொடர்ந்து படிக்க..................
www.manushyaputhiran.uyirmmai.com

Friday, July 17, 2009

மனுஷ்ய புத்திரன் பக்கங்களில்

உயிர்மை மனுஷ்ய புத்திரன் பக்கங்களில் சமீபத்திய பதிவுகள்.
1. என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்..
2. அன்புள்ள வண்ணதாசனுக்கு
3.மனுஷ்ய புத்திரன் மங்கையர் மலர் பதில்கள்
4. மனுஷ்ய புத்திரன் குங்குமம் பதில்கள்
வாசிக்க
http://www.manushyaputhiran.uyirmmai.com/

Wednesday, July 01, 2009

தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்தது என்ன?

இன்று காலை கணினியை திறந்ததும் முத்துக்கிருஷ்ணன் சாட்டில் வந்து இதைப் படிங்க முதல்ல என்று இரண்டு இணைப்புகளை தந்தார். அது கவிஞர் தேவேந்திரபூபதியின் கடவு இலக்கிய அமைப்பு சார்பாக மதுரையில் சமீபத்தில் நடந்த ஒரு இலக்கிய கருத்தரங்கு பற்றி கவிஞர் தமிழ்நதி தனது வலைப்பூவில் எழுதிய இரண்டு பதிவுகள்.

http://tamilnathy.blogspot.com/
http://tamilnathy.blogspot.com/2009/06/blog-post_29.html
கூட்டத்தில் தமிழ்நாட்டு படைப்பாளிகள் ஈழப்பிரச்சினையில் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற தமிழ்நதியின் குற்றச்சாட்டை ஒட்டி எழுந்த விவாதத்தை விரிவாகப் பதிவு செய்திருந்தார். தமிழ்நதியின் மீது எனக்குள்ள அன்பிற்கும் மதிப்பிற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று கடும் அரசியல் வேறுபாடுகளைப் பற்றி பேசும் சமயத்தில்கூட தனது இலக்கியம் சார்ந்த விருப்புகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதுதான். இது தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் அதுவும் இளம் எழுத்தாளர்களிடம் காணக்கிடைக்காத ஒரு குணம். அரசியல் வேற்றுமைகளுக்காக தனது முன்னோடியான எழுத்தாளர்களை அவர் அவமானப்படுத்த ஒருபோதும் துணிந்ததில்லை. ஈழப்பிரச்சினை தொடர்பாக அவர் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள்மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பான சில திருத்தங்களை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம். எவ்வளவு சிரமங்களுக்கு இடையே தேவேந்திரபூபதி இதுபோன்ற கூட்டங்களை நடத்திவருகிறார் என்ற பிரச்சினைக்கு பிறகு வருகிறேன்......
கட்டுரையை தொடர்ந்து வாசிக்க.....
http://www.manushyaputhiran.uyirmmai.com/