Friday, July 17, 2009

மனுஷ்ய புத்திரன் பக்கங்களில்

உயிர்மை மனுஷ்ய புத்திரன் பக்கங்களில் சமீபத்திய பதிவுகள்.
1. என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்..
2. அன்புள்ள வண்ணதாசனுக்கு
3.மனுஷ்ய புத்திரன் மங்கையர் மலர் பதில்கள்
4. மனுஷ்ய புத்திரன் குங்குமம் பதில்கள்
வாசிக்க
http://www.manushyaputhiran.uyirmmai.com/

Wednesday, July 01, 2009

தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்தது என்ன?

இன்று காலை கணினியை திறந்ததும் முத்துக்கிருஷ்ணன் சாட்டில் வந்து இதைப் படிங்க முதல்ல என்று இரண்டு இணைப்புகளை தந்தார். அது கவிஞர் தேவேந்திரபூபதியின் கடவு இலக்கிய அமைப்பு சார்பாக மதுரையில் சமீபத்தில் நடந்த ஒரு இலக்கிய கருத்தரங்கு பற்றி கவிஞர் தமிழ்நதி தனது வலைப்பூவில் எழுதிய இரண்டு பதிவுகள்.

http://tamilnathy.blogspot.com/
http://tamilnathy.blogspot.com/2009/06/blog-post_29.html
கூட்டத்தில் தமிழ்நாட்டு படைப்பாளிகள் ஈழப்பிரச்சினையில் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற தமிழ்நதியின் குற்றச்சாட்டை ஒட்டி எழுந்த விவாதத்தை விரிவாகப் பதிவு செய்திருந்தார். தமிழ்நதியின் மீது எனக்குள்ள அன்பிற்கும் மதிப்பிற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று கடும் அரசியல் வேறுபாடுகளைப் பற்றி பேசும் சமயத்தில்கூட தனது இலக்கியம் சார்ந்த விருப்புகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதுதான். இது தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் அதுவும் இளம் எழுத்தாளர்களிடம் காணக்கிடைக்காத ஒரு குணம். அரசியல் வேற்றுமைகளுக்காக தனது முன்னோடியான எழுத்தாளர்களை அவர் அவமானப்படுத்த ஒருபோதும் துணிந்ததில்லை. ஈழப்பிரச்சினை தொடர்பாக அவர் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள்மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பான சில திருத்தங்களை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம். எவ்வளவு சிரமங்களுக்கு இடையே தேவேந்திரபூபதி இதுபோன்ற கூட்டங்களை நடத்திவருகிறார் என்ற பிரச்சினைக்கு பிறகு வருகிறேன்......
கட்டுரையை தொடர்ந்து வாசிக்க.....
http://www.manushyaputhiran.uyirmmai.com/

Tuesday, March 10, 2009

கண்ணிவெடிகளின் ஊடே: ஒரு துய்ரக் கதை

வாழ்க்கைச் சித்திரம்:வானத்தின் மறுபக்கம்

அமெரிக்காவிலுள்ள ஏ. பி. சி. நியூஸ் - குட்மார்னிங் அமெரிக்கா (ABC News--Good Morning America) தொலைக்காட்சியும், சைமன் - சஸ்டர் (Simon-Schuster) பதிப்பகமும் இணைந்து, கடந்த 2005-ஆம் ஆண்டு தனது வாசகர்களுக்காக அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்த கட்டுரைப் போட்டியொன்றை அறிவித்தது. இக்கட்டுரைப் போட்டிக்காக சுமார் 6000 கட்டுரைகளும் மற்றும் 20000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஈர்ப்பான உண்மைக் கதைகளும் வந்தடைந்திருக்கின்றன. இறுதியில் நடுவர் குழுவினர், பெட்டி பர்கி யூஸன், மெர்ஸிடஸ் ஃபுளோரன் ஷியா புரூட்நிக்கி மற்றும் ஃபாரா அஹ்மதி ஆகிய மூன்று நபர்கள் எழுதியிருந்த படைப்புகளைச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்து, வாசகர்களின் வாக் கெடுப்புக்கு விட்டனர். வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், ஃபாரா அஹ்மதி யின் வாழ்க்கைக் கதை சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘The Other side of the sky’ என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஃபாரா அஹ்மதி.. தன்னுடைய ஏழாவது வயதில், கன்னிவெடி விபத்தொன்றில் தன் இடது காலை இழந்த ஃபாராவின் குழந்தைப்பருவம் பெரும் அச்சங்களும், சோகங்களும் நிறைந்தவை. தனது சகோதரர்கள் இருவரைத் தொலைத்ததோடு, தனது தந்தையையும், சகோதரிகளையும் வெடிகுண்டு விபத்தில் இழந்த ஃபாரா, தற்போது தன் அம்மாவோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார். The other side of the sky என்கிற அந்தப் புத்தகச் சுருக்கத்தின் தமிழாக்கமே இந்தக் கட்டுரை.

தொடர்ந்து வாசிக்க

http://www.uyirmmai.com/


கரை மீண்ட காந்தி-இந்த வார உயிரோசையில்..

கடந்த வெள்ளிக்கிழமை காந்தியின் பொருட்கள் ஏலத்துக்கு வந்தன. 364ஆவது அயிட்டமாக இது ஏலத்துக்கு வந்தது. அப்போது காந்தி குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச கேட்புத் தொகையாக ரூ. 15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்களும் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ‘சிண்டிகேட்’ அமைத்து ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு இந்தியருக்கு எதிராக வேறு யாரும் ஏலம் கேட்கக் கூடாது என்று சிண்டிகேட்டில் நிபந்தனை போட்டு ஏலத் தொகை உயர்வைக் கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனால் ஏலம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் இந்தக் கட்டுப்பாடு எல்லாம் தகர்ந்து மில்லியனில் எகிறியது. லண்டனிலிருந்து ஒருவர் ரூ. 8.75 கோடிக்கு ஏலம் கேட்டார். திடீர் திருப்பமாக பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் டோனி பேடி என்பவர் ரூ. 9.3 கோடிக்கு காந்தியின் பொருட்களை ஏலத்தில் எடுத்து இந்தியர்களின் ‘மானத்தை’ காத்தார். சட்ட சிக்கல்கள் இருப்பதால் காந்தியின் பொருட்கள் இரண்டு வார காலத்துக்கு ஏல நிறுவனத்திடமே இருக்கும். அதன்பின்னர் மல்லையாவிடம் அது ஒப்படைக்கப்படும்

கட்டுரையை முழுமையாக வாசிக்க...இன்னும் ஏராளமான புத்தம் புதிய கட்டுரைகளுடன் http://www.uyirmmai.com/uyirosai/

Monday, September 29, 2008

நடிகர் விஜய்யின் அப்பாவிடம் கேட்ட மறக்க முடியாத கேள்வி

திரைகளுக்குப் பின்னே
தமிழ் மகன்

நான் சினிமா நிருபராகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை.
தினமணியில் திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நேரம். நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் (அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர்) ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார்.
விஜய்யின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய நேரம். `பூவே உனக்காக', `ப்ரியமுடன்', `ஒன்ஸ்மோர்' என்று படங்களின் வெற்றிப் பட்டியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் மகனுக்குத் திருமணம் வைத்திருந்தார். திருமணத்துக்கு ஆசிரியரை வரவேற்கத்தான் அவர் வந்திருந்தார்.
``பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன்.அவசியம் நீங்கள் வந்திருந்து வாழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ``இவர் எங்கள் சினிமா எடிட்டர். இவர் வருவார். எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை'' என்று என்னைக் கைகாட்டினார்.
பிறகு பொதுவாக சினிமா பற்றி பேசினார்கள். எடிட்டர் ஒரு முறை சிவாஜிகணேசனைச் சந்தித்திக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார். கிளம்பும்போது சிவாஜி ``தீர்த்தம் சாப்பிட்டுட்டுப் போறீங்களா'' என்றாராம்.
அவரும் சிவாஜிகணேசன் பற்றி ஏதோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
கிளம்பும்போது எடிட்டர் மறக்காமல் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டார், அவருடைய ஞாபக சக்தி வலுவானதாக இருந்தால்.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

வலது சாரி அரசியலின் மூன்று முகங்கள்
மாயா

இந்திய வலது சாரி அரசியலைப் பற்றிய கட்டுரையில் அத்வானி, மோடிக்கு அடுத்து அப்துல் கலாமின் பெயர் ஏன் இடம் பிடித்தது என்று பலருக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படலாம். கேட்க பொருத்தமில்லாதது அந்த பெயர் வரிசைதான் இன்று வலது சாரி அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வைத்திருக்கும் வியூகம். 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஐந்து ஆண்டுகளாக தில்லியில் நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏற்கனவே பா.ஜ.கவின் வெற்றிக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் பா.ஜ.க அதோடு திருப்தியடையவில்லை. தங்களது வனவாசத்தை முடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க ஒரு சாத்வீகமான முகம், ஒரு இந்துத்துவா முகம், ஒரு பயங்கரவாத எதிர்ப்பு முகம் என்ற மூன்றைக் கொண்டு களமிறங்குகிறது.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/


மனம் பிறந்த சட்டங்கள்
ஆர். அபிலாஷ்
இந்திய கற்பழிப்பு சட்டம் கற்பழிப்பாளர்களுக்கு பலவகைகளில் ஆதரவானது. உதாரணமாய் இதைப் படியுங்கள்.
பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம்: "ஒரு ஆண் கற்பழிப்பு அல்லது வற்புறுத்தப்பட்ட பாலுறவுக்காய் நீதிவிசாரணை செய்யப்படும்போது, குற்றத்துக்கு பலியானவர் பொதுவாய் ஒழுக்கமீறியவராய் காட்டப்படலாம்"
அதாவது பாலியல் ஒழுக்கம் மீறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை செல்லுபடியாகாது என்று இச்சட்டம் சொல்லுகிறது. இங்கு ஒழுக்கம் என்ற வார்த்தையை கவனிக்கவும்.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

ஒரு பால் உறவு: ஏனிந்த பதட்டம்?
வாஸந்தி

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில் பல சூடான விவாதங்கள் அங்கு அரசியல் பரிணாமம் பெற்றன. அதில் முக்கியமான ஒன்று ஓரினத் திருமணங்கள். காலிஃபோர்னியாவில் அப்படிப்பட்ட திருமணங்கள் நடத்த மேயர் அனுமதி அளித்தவுடன் நூற்றுக்கணக்கான ஓரின ஜோடிகள் அங்கு பதிவு செய்துகொள்ள விரைந்தார்கள். வாஷிங்டனில் இருந்த ரிபப்ளிகன் அரசு அரண்டு போயிற்று. கிறித்துவ மதகுருமார்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஓரின உறவே தவறு என்கையில் ஓரின திருமணத்தை எப்படி அனுமதிப்பது? 'மீண்டும் ஜனித்த கிறித்துவர்" என்று சொல்லப்படும் அதிபர் புஷ் இத்தகைய திருமணங்கள் இயற்கைக்கு விரோதமானவை என்றார். திருமண பந்தம் பதிவு செய்யப்பட்டாலே அமெரிக்காவில் அன்றாட வாழ்விற்கு சௌகர்யம். சில சலுகைகள் உண்டு. அதனாலேயே ஓரின் உறவு வைத்து குடும்பம் செய்பவர்கள் அதை முறைப்படி சட்டப்பதிவு செய்து கொள்ள ஆர்வப்பட்டார்கள். அங்கு ஓரின உறவுகளின் இருப்பு ஓரளவுக்குப் பழகிப்போன விஷயமாக ஏற்கப்பட்டிருந்தாலும் சகஜமான விஷயம் இல்லை. பழமைவாதிகள் அதை அங்கீகரிக்க இன்றும் மறுத்து வருவது வியப்பில்லை. முற்போக்கு வாதிகளாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் ஜனநாயக வாதிகளும் அதை முழுமையாக ஏற்கவில்லை.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

முகேஷ் அம்பானி-அனில் அம்பானி: அபூர்வ சகோதரர்கள்
மனோஜ்
போட்டுக் கொடுப்பதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நேரடியாக போட்டுக் கொடுப்பது. மற்றொன்று, போகிறபோக்கில் நாசூக்காக போட்டுக் கொடுப்பது. முகேஷ் அம்பானி இரண்டாம் வகை. அவர் போட்டுக் கொடுத்தது தன் தம்பியைத்தான். எங்கே, எதற்கு என்று போவதற்கு முன் உலகின் பணக்கார சகோதரர்களின் குடும்பக் கதைக்குள் கொஞ்சம் சென்று வரலாம். இந்தியாவின் மிகப்பெரும் பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய திருபாய் அம்பானியின் செல்ல புதல்வர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. அப்பாவிடம் அமைதியாக அடங்கி, ஒடுங்கி மும்பையில் வளர்ந்தவர்கள்


தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

இன்னும் பல சிறப்பு ஆக்கங்களுடன்

இந்த வார உயிரோசை இதழ் உங்களுக்காக.........................
http://www.uyirmmai.com/

Wednesday, September 24, 2008

ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

ரஜினி தமிழக அரசியல் களத்திற்குத் தயாராவதற்காக பேவரைட் ஜோதிடர்களை நாடுகிறார், வட இந்தியாவில் எல்.கே.அத்வானி தனக்குரியது என்று கருதும் பிரதமர் நாற்காலிக்குத் தயாராவதற்காக ஜோதிடர்களை நாடுகிறார். திராவிடச் சூரியனின் குடும்பத்தினர் உள்பட பல அரசியல்வாதிகளும் ஜோதிடர்களின் மந்திராலோசனையைப் பெறுவது வழக்கம் என்றாலும் ரஜினி ஒரு வலதுசாரி அரசியல்வாதியாகத்தான் வருவார் என்று அவர் நெற்றியில் எழுதி ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற வலதுசாரி இயக்கங்கள் எதுவும் வலுவாகக் காலூன்றியதில்லை என்ற நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் சூழலில் இந்துத்துவ சக்திகளுக்கு ஒரு அபாயகரமான வலுவைக் கொடுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தங்களது இந்துத்துவ அரசியலை முன்னிறுத்த அவர்களுக்கு ஒரு சரியான வசீகரமிக்க தலைவர் கிடைத்தால் அது வெறும் கையை சுற்றிக்கொண்டிருப்பவன் கையில் ஒரு போர் வாளைக் கொடுப்பதற்குச் சமம்.

- சஞ்சித்

.

முழுமையாக படிக்க
வாருங்கள் உயிரோசை இந்த வார இதழுக்கு...

http://www.uyirmmai.com/

Tuesday, September 23, 2008

சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்


சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்...

தமிழவன்


பாரதியாருடைய காலத்தில் சங்க இலக்கியம் ஓரளவு பரவி எல்லோர் கவனத்தையும் கவர்ந்தாலும் பெரும்பான்மை பிராமணர்களைப் போல பாரதியும் சங்க இலக்கியத்தால் பாதிப்படையவில்லை. அவருடைய காலத் தமிழ் முழுசும் சங்க இலக்கியத்தால் பாதிப்பு அடையவில்லை. பாரதி தாசன் எப்படித் தன் இலக்கியத்தை முழுமையாய் சங்க இலக்கியத்துக்குள் கொண்டுவந்தாரோ அந்த அளவு பாரதியைச் சங்க இலக்கியப் படிப்பு பாதிக்காத சூழல் அன்று இருந்திருக்கிறது. ஆனால் பாரதி காலம் வரை தமிழில் இல்லாத அனைத்திந்தியா, ஒரு சிந்தனைச் சட்டகமாய்த் தமிழிலக்கியத்தில் பாரதி காலத்தில் வருகிறது. இதற்கு இலக்கியக்காரணம் இல்லை; அரசியல் காரணம் இருக்கிறது. சுதந்திரப் போர் தமிழில் அதுவரை இல்லாத ஒரு விஷயத்தை - அனைத்திந்தியாவை - கொண்டுவந்து சேர்க்கிறது. காங்கிரஸ் கட்சி 1967-ல் தமிழகத்தில் வேரறுக்கப்பட்டதற்கும் அன்றிலிருந்து தமிழ்ப்பண்பாட்டை அது பாதிக்காத ஒரு வடநாட்டுக் கட்சியாகவே தொடந்து மிளிர்வதற்கும் ஆழமான பண்பாட்டுக் காரணம் இருக்கிறது. எல்லோரும் அரசியல் காரணம் என்று கருதினாலும் அது அரசியல் காரணமல்ல; பண்பாட்டுக் காரணம்- அதாவது சங்க இலக்கியம் தன்னைத் தமிழ் மண்ணில் நிலைநிறுத்திய செயல்தான் 1967-இலிருந்து காங்கிரஸ் பண்பாட்டைத் தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தது. 1905 வாக்கில் பாரதிமூலம் தொடங்கப்பட்ட ஒரு - அனைத்திந்திய - அடையாளத்தை, சங்க இலக்கியம் கடந்த சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாற்றியுள்ளது. இதற்கு மாற்றான அனைத்திந்திய பிரதேசங்களின் பண்பாட்டைக் கொண்டு வரும் அனைத்தியக் கடமையைச் செய்யாததே திராவிடக்கட்சிகளின் அனைத்திந்தியத் தோல்வி. முரசொலி மாறனை அவருடைய மாநில சுயாட்சி என்ற சிறப்புப்புத்தகம் சார்ந்து நினைவுநாள் கொண்டாடாமல் வேறு முறையில் கொண்டாடியபோதே திராவிடச் சிந்தனை இந்திய அரசியலில் உயர்ந்தோர் எதிர்பார்த்த பயனைத் தராமல் தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது தெரிந்தது. ஓரளவு வி.பி. சிங் மூலமும், மாயாவதி மூலமும் திராவிடச்சிந்தனைகள் அனைந்திந்தியாவுக்கும் போன ஆரம்பக்கட்டம் முடிந்துவிட்டது போலுள்ளது

முழுமையாக படிக்க
வாருங்கள் உயிரோசை இந்த வார இதழுக்கு...
http://www.uyirmmai.com/

Sunday, September 14, 2008

தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்


டைம்ஸ் ஆஃப் இந்தியா இன்று helpless? என்ற தலைப்பில் தில்லி குண்டுவெடிப்புகள் பற்றிய செய்தியினை வெளியிட்டிருக்கிறது. இந்த தலைப்பின் பின் இருக்கும் அச்சமும் நம்பிக்கையின்மையும் நாடு முழுக்க பரவிவரும் பீதியின் அடையாளங்களே. இது தொடர்கதையாகிவிட்டது. மீண்டும் அப்பாவிகளும் எளிய மக்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். நடைபாதையில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொல்லபட்ட பின்பு எஞ்சிய ஒருவர் கேட்கிறார் நாங்கள் என்ன தவறு செய்தோம்?' என்று.
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். ஏதோ இது சட்ட ஒழுங்கு பிரச்சினை என்பதுபோல. இந்த அபத்தமான பல்லவி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின்போதும் பாடப்படுகிறது. இந்த பயங்கரவாத வலைப் பின்னலை கண்டுபிடிக்க முடியாத மொத்த அரசு அமைப்பின் தோல்வியை கொடூரமான சட்டங்களை இயற்றுவதன் வாயிலாக தடுத்து நிறுத்தமுடியாது. இந்தக் குற்றங்களை இழைப்பவர்களின் தொடர்புகளும் அதற்கு பின் இருக்கும் மனோபாவமும் எல்லா சட்டரீதியான அச்சுறுத்தல்களையும் கடந்தவை.....

இக்கட்டுரையை தொடர்ந்து வாசிக்க வாருங்கள் உயிர்மை இணைய தளத்தின் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு...

http://www.uyirmmai.com/

தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்