Tuesday, July 21, 2009
சாருவுக்கு ஒரு கடிதம்
‘சாருவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?’
‘ஒரு பிரச்சினையும் இல்லையே.’
‘சாரு ஆன்லைனில் உங்களைத் திட்டி எழுதியிருக்காரே.’
‘அப்படியா.. நான் படிக்கலையே.’
‘அதாங்க... மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும்’
‘ஓ.. அதுவா...அதுல திட்டி எதுவும் இருக்கறதா தெரியலையே.’
‘சும்மா நடிக்காதீங்க...’
‘நான் ஏங்க நடிக்கணும்?’
‘இல்ல நீங்கள் ரெண்டுபேரும் பேசிவச்சுகிட்டு இதையெல்லாம் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன்.’
இது ஒரு சாம்பிள் உரையாடல்
தொடர்ந்து படிக்க..................
www.manushyaputhiran.uyirmmai.com
Friday, July 17, 2009
மனுஷ்ய புத்திரன் பக்கங்களில்
1. என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்..
2. அன்புள்ள வண்ணதாசனுக்கு
3.மனுஷ்ய புத்திரன் மங்கையர் மலர் பதில்கள்
4. மனுஷ்ய புத்திரன் குங்குமம் பதில்கள்
வாசிக்க
http://www.manushyaputhiran.uyirmmai.com/
Wednesday, July 01, 2009
தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்தது என்ன?
http://tamilnathy.blogspot.com/
http://tamilnathy.blogspot.com/2009/06/blog-post_29.html
கூட்டத்தில் தமிழ்நாட்டு படைப்பாளிகள் ஈழப்பிரச்சினையில் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற தமிழ்நதியின் குற்றச்சாட்டை ஒட்டி எழுந்த விவாதத்தை விரிவாகப் பதிவு செய்திருந்தார். தமிழ்நதியின் மீது எனக்குள்ள அன்பிற்கும் மதிப்பிற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று கடும் அரசியல் வேறுபாடுகளைப் பற்றி பேசும் சமயத்தில்கூட தனது இலக்கியம் சார்ந்த விருப்புகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதுதான். இது தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் அதுவும் இளம் எழுத்தாளர்களிடம் காணக்கிடைக்காத ஒரு குணம். அரசியல் வேற்றுமைகளுக்காக தனது முன்னோடியான எழுத்தாளர்களை அவர் அவமானப்படுத்த ஒருபோதும் துணிந்ததில்லை. ஈழப்பிரச்சினை தொடர்பாக அவர் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள்மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பான சில திருத்தங்களை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம். எவ்வளவு சிரமங்களுக்கு இடையே தேவேந்திரபூபதி இதுபோன்ற கூட்டங்களை நடத்திவருகிறார் என்ற பிரச்சினைக்கு பிறகு வருகிறேன்......
கட்டுரையை தொடர்ந்து வாசிக்க.....
http://www.manushyaputhiran.uyirmmai.com/
Tuesday, March 10, 2009
கண்ணிவெடிகளின் ஊடே: ஒரு துய்ரக் கதை
வாழ்க்கைச் சித்திரம்:வானத்தின் மறுபக்கம்
அமெரிக்காவிலுள்ள ஏ. பி. சி. நியூஸ் - குட்மார்னிங் அமெரிக்கா (ABC News--Good Morning America) தொலைக்காட்சியும், சைமன் - சஸ்டர் (Simon-Schuster) பதிப்பகமும் இணைந்து, கடந்த 2005-ஆம் ஆண்டு தனது வாசகர்களுக்காக அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்த கட்டுரைப் போட்டியொன்றை அறிவித்தது. இக்கட்டுரைப் போட்டிக்காக சுமார் 6000 கட்டுரைகளும் மற்றும் 20000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஈர்ப்பான உண்மைக் கதைகளும் வந்தடைந்திருக்கின்றன. இறுதியில் நடுவர் குழுவினர், பெட்டி பர்கி யூஸன், மெர்ஸிடஸ் ஃபுளோரன் ஷியா புரூட்நிக்கி மற்றும் ஃபாரா அஹ்மதி ஆகிய மூன்று நபர்கள் எழுதியிருந்த படைப்புகளைச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்து, வாசகர்களின் வாக் கெடுப்புக்கு விட்டனர். வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், ஃபாரா அஹ்மதி யின் வாழ்க்கைக் கதை சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘The Other side of the sky’ என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஃபாரா அஹ்மதி.. தன்னுடைய ஏழாவது வயதில், கன்னிவெடி விபத்தொன்றில் தன் இடது காலை இழந்த ஃபாராவின் குழந்தைப்பருவம் பெரும் அச்சங்களும், சோகங்களும் நிறைந்தவை. தனது சகோதரர்கள் இருவரைத் தொலைத்ததோடு, தனது தந்தையையும், சகோதரிகளையும் வெடிகுண்டு விபத்தில் இழந்த ஃபாரா, தற்போது தன் அம்மாவோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார். The other side of the sky என்கிற அந்தப் புத்தகச் சுருக்கத்தின் தமிழாக்கமே இந்தக் கட்டுரை.
தொடர்ந்து வாசிக்க
கரை மீண்ட காந்தி-இந்த வார உயிரோசையில்..
கட்டுரையை முழுமையாக வாசிக்க...இன்னும் ஏராளமான புத்தம் புதிய கட்டுரைகளுடன் http://www.uyirmmai.com/uyirosai/