Tuesday, July 21, 2009

சாருவுக்கு ஒரு கடிதம்

மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் படித்தேன். தமிழில் இப்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் விவரமானவர்கள் என்று நான் கருதும் இரண்டுபேரில் நீங்களும் ஒருவர். என்னை ஒரு சிவாஜி ரசிகன் எனக் கண்டுபிடித்த முதல் ஆள் நீங்கள்தான் என்பதால் எனது கருத்து உறுதிப்படுகிறது. பொதுவாக சிவாஜி ரசிகன் என்று சொன்னால் நவீன இலக்கியச்சூழலில் மதிக்கமாட்டார்கள். அதனால் இந்த உண்மையை இவ்வளவு காலம் கட்டிக் காப்பாற்றி வந்தேன். நீங்கள் அதைக் கண்டுபிடித்தீர்கள் என்பதைவிட அம்பலப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லலாம். பெரும்பாலான சிவாஜி படங்களில் சிவாஜி உணர்வுபூர்வமான உறவுகளில் தோற்கடிக்கப்படுவார். அவரது வெற்றிபெற்ற அநேகப்படங்களில் அவர் மனம் கசந்துவெளியேறிச் செல்லும் பாத்திரங்களையே ஏற்றிருக்கிறார். சினிமாவிலும் வாழ்க்கையிலும் சிவாஜிகணேசன்களின் நிலை எப்போதும் அதுதான். உங்கள் பதிவு வெளிவந்ததும் பல நண்பர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள்

‘சாருவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?’

‘ஒரு பிரச்சினையும் இல்லையே.’

‘சாரு ஆன்லைனில் உங்களைத் திட்டி எழுதியிருக்காரே.’

‘அப்படியா.. நான் படிக்கலையே.’

‘அதாங்க... மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும்’

‘ஓ.. அதுவா...அதுல திட்டி எதுவும் இருக்கறதா தெரியலையே.’

‘சும்மா நடிக்காதீங்க...’

‘நான் ஏங்க நடிக்கணும்?’

‘இல்ல நீங்கள் ரெண்டுபேரும் பேசிவச்சுகிட்டு இதையெல்லாம் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன்.’

இது ஒரு சாம்பிள் உரையாடல்

தொடர்ந்து படிக்க..................
www.manushyaputhiran.uyirmmai.com

Friday, July 17, 2009

மனுஷ்ய புத்திரன் பக்கங்களில்

உயிர்மை மனுஷ்ய புத்திரன் பக்கங்களில் சமீபத்திய பதிவுகள்.
1. என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்..
2. அன்புள்ள வண்ணதாசனுக்கு
3.மனுஷ்ய புத்திரன் மங்கையர் மலர் பதில்கள்
4. மனுஷ்ய புத்திரன் குங்குமம் பதில்கள்
வாசிக்க
http://www.manushyaputhiran.uyirmmai.com/

Wednesday, July 01, 2009

தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்தது என்ன?

இன்று காலை கணினியை திறந்ததும் முத்துக்கிருஷ்ணன் சாட்டில் வந்து இதைப் படிங்க முதல்ல என்று இரண்டு இணைப்புகளை தந்தார். அது கவிஞர் தேவேந்திரபூபதியின் கடவு இலக்கிய அமைப்பு சார்பாக மதுரையில் சமீபத்தில் நடந்த ஒரு இலக்கிய கருத்தரங்கு பற்றி கவிஞர் தமிழ்நதி தனது வலைப்பூவில் எழுதிய இரண்டு பதிவுகள்.

http://tamilnathy.blogspot.com/
http://tamilnathy.blogspot.com/2009/06/blog-post_29.html
கூட்டத்தில் தமிழ்நாட்டு படைப்பாளிகள் ஈழப்பிரச்சினையில் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற தமிழ்நதியின் குற்றச்சாட்டை ஒட்டி எழுந்த விவாதத்தை விரிவாகப் பதிவு செய்திருந்தார். தமிழ்நதியின் மீது எனக்குள்ள அன்பிற்கும் மதிப்பிற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று கடும் அரசியல் வேறுபாடுகளைப் பற்றி பேசும் சமயத்தில்கூட தனது இலக்கியம் சார்ந்த விருப்புகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதுதான். இது தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் அதுவும் இளம் எழுத்தாளர்களிடம் காணக்கிடைக்காத ஒரு குணம். அரசியல் வேற்றுமைகளுக்காக தனது முன்னோடியான எழுத்தாளர்களை அவர் அவமானப்படுத்த ஒருபோதும் துணிந்ததில்லை. ஈழப்பிரச்சினை தொடர்பாக அவர் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள்மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பான சில திருத்தங்களை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம். எவ்வளவு சிரமங்களுக்கு இடையே தேவேந்திரபூபதி இதுபோன்ற கூட்டங்களை நடத்திவருகிறார் என்ற பிரச்சினைக்கு பிறகு வருகிறேன்......
கட்டுரையை தொடர்ந்து வாசிக்க.....
http://www.manushyaputhiran.uyirmmai.com/

Tuesday, March 10, 2009

கண்ணிவெடிகளின் ஊடே: ஒரு துய்ரக் கதை

வாழ்க்கைச் சித்திரம்:வானத்தின் மறுபக்கம்

அமெரிக்காவிலுள்ள ஏ. பி. சி. நியூஸ் - குட்மார்னிங் அமெரிக்கா (ABC News--Good Morning America) தொலைக்காட்சியும், சைமன் - சஸ்டர் (Simon-Schuster) பதிப்பகமும் இணைந்து, கடந்த 2005-ஆம் ஆண்டு தனது வாசகர்களுக்காக அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்த கட்டுரைப் போட்டியொன்றை அறிவித்தது. இக்கட்டுரைப் போட்டிக்காக சுமார் 6000 கட்டுரைகளும் மற்றும் 20000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஈர்ப்பான உண்மைக் கதைகளும் வந்தடைந்திருக்கின்றன. இறுதியில் நடுவர் குழுவினர், பெட்டி பர்கி யூஸன், மெர்ஸிடஸ் ஃபுளோரன் ஷியா புரூட்நிக்கி மற்றும் ஃபாரா அஹ்மதி ஆகிய மூன்று நபர்கள் எழுதியிருந்த படைப்புகளைச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்து, வாசகர்களின் வாக் கெடுப்புக்கு விட்டனர். வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், ஃபாரா அஹ்மதி யின் வாழ்க்கைக் கதை சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘The Other side of the sky’ என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஃபாரா அஹ்மதி.. தன்னுடைய ஏழாவது வயதில், கன்னிவெடி விபத்தொன்றில் தன் இடது காலை இழந்த ஃபாராவின் குழந்தைப்பருவம் பெரும் அச்சங்களும், சோகங்களும் நிறைந்தவை. தனது சகோதரர்கள் இருவரைத் தொலைத்ததோடு, தனது தந்தையையும், சகோதரிகளையும் வெடிகுண்டு விபத்தில் இழந்த ஃபாரா, தற்போது தன் அம்மாவோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார். The other side of the sky என்கிற அந்தப் புத்தகச் சுருக்கத்தின் தமிழாக்கமே இந்தக் கட்டுரை.

தொடர்ந்து வாசிக்க

http://www.uyirmmai.com/


கரை மீண்ட காந்தி-இந்த வார உயிரோசையில்..

கடந்த வெள்ளிக்கிழமை காந்தியின் பொருட்கள் ஏலத்துக்கு வந்தன. 364ஆவது அயிட்டமாக இது ஏலத்துக்கு வந்தது. அப்போது காந்தி குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச கேட்புத் தொகையாக ரூ. 15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்களும் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ‘சிண்டிகேட்’ அமைத்து ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு இந்தியருக்கு எதிராக வேறு யாரும் ஏலம் கேட்கக் கூடாது என்று சிண்டிகேட்டில் நிபந்தனை போட்டு ஏலத் தொகை உயர்வைக் கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனால் ஏலம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் இந்தக் கட்டுப்பாடு எல்லாம் தகர்ந்து மில்லியனில் எகிறியது. லண்டனிலிருந்து ஒருவர் ரூ. 8.75 கோடிக்கு ஏலம் கேட்டார். திடீர் திருப்பமாக பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் டோனி பேடி என்பவர் ரூ. 9.3 கோடிக்கு காந்தியின் பொருட்களை ஏலத்தில் எடுத்து இந்தியர்களின் ‘மானத்தை’ காத்தார். சட்ட சிக்கல்கள் இருப்பதால் காந்தியின் பொருட்கள் இரண்டு வார காலத்துக்கு ஏல நிறுவனத்திடமே இருக்கும். அதன்பின்னர் மல்லையாவிடம் அது ஒப்படைக்கப்படும்

கட்டுரையை முழுமையாக வாசிக்க...இன்னும் ஏராளமான புத்தம் புதிய கட்டுரைகளுடன் http://www.uyirmmai.com/uyirosai/