Tuesday, July 21, 2009

சாருவுக்கு ஒரு கடிதம்

மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் படித்தேன். தமிழில் இப்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் விவரமானவர்கள் என்று நான் கருதும் இரண்டுபேரில் நீங்களும் ஒருவர். என்னை ஒரு சிவாஜி ரசிகன் எனக் கண்டுபிடித்த முதல் ஆள் நீங்கள்தான் என்பதால் எனது கருத்து உறுதிப்படுகிறது. பொதுவாக சிவாஜி ரசிகன் என்று சொன்னால் நவீன இலக்கியச்சூழலில் மதிக்கமாட்டார்கள். அதனால் இந்த உண்மையை இவ்வளவு காலம் கட்டிக் காப்பாற்றி வந்தேன். நீங்கள் அதைக் கண்டுபிடித்தீர்கள் என்பதைவிட அம்பலப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லலாம். பெரும்பாலான சிவாஜி படங்களில் சிவாஜி உணர்வுபூர்வமான உறவுகளில் தோற்கடிக்கப்படுவார். அவரது வெற்றிபெற்ற அநேகப்படங்களில் அவர் மனம் கசந்துவெளியேறிச் செல்லும் பாத்திரங்களையே ஏற்றிருக்கிறார். சினிமாவிலும் வாழ்க்கையிலும் சிவாஜிகணேசன்களின் நிலை எப்போதும் அதுதான். உங்கள் பதிவு வெளிவந்ததும் பல நண்பர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள்

‘சாருவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?’

‘ஒரு பிரச்சினையும் இல்லையே.’

‘சாரு ஆன்லைனில் உங்களைத் திட்டி எழுதியிருக்காரே.’

‘அப்படியா.. நான் படிக்கலையே.’

‘அதாங்க... மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும்’

‘ஓ.. அதுவா...அதுல திட்டி எதுவும் இருக்கறதா தெரியலையே.’

‘சும்மா நடிக்காதீங்க...’

‘நான் ஏங்க நடிக்கணும்?’

‘இல்ல நீங்கள் ரெண்டுபேரும் பேசிவச்சுகிட்டு இதையெல்லாம் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன்.’

இது ஒரு சாம்பிள் உரையாடல்

தொடர்ந்து படிக்க..................
www.manushyaputhiran.uyirmmai.com