கடந்த வெள்ளிக்கிழமை காந்தியின் பொருட்கள் ஏலத்துக்கு வந்தன. 364ஆவது அயிட்டமாக இது ஏலத்துக்கு வந்தது. அப்போது காந்தி குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச கேட்புத் தொகையாக ரூ. 15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்களும் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ‘சிண்டிகேட்’ அமைத்து ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு இந்தியருக்கு எதிராக வேறு யாரும் ஏலம் கேட்கக் கூடாது என்று சிண்டிகேட்டில் நிபந்தனை போட்டு ஏலத் தொகை உயர்வைக் கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனால் ஏலம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் இந்தக் கட்டுப்பாடு எல்லாம் தகர்ந்து மில்லியனில் எகிறியது. லண்டனிலிருந்து ஒருவர் ரூ. 8.75 கோடிக்கு ஏலம் கேட்டார். திடீர் திருப்பமாக பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் டோனி பேடி என்பவர் ரூ. 9.3 கோடிக்கு காந்தியின் பொருட்களை ஏலத்தில் எடுத்து இந்தியர்களின் ‘மானத்தை’ காத்தார். சட்ட சிக்கல்கள் இருப்பதால் காந்தியின் பொருட்கள் இரண்டு வார காலத்துக்கு ஏல நிறுவனத்திடமே இருக்கும். அதன்பின்னர் மல்லையாவிடம் அது ஒப்படைக்கப்படும்
கட்டுரையை முழுமையாக வாசிக்க...இன்னும் ஏராளமான புத்தம் புதிய கட்டுரைகளுடன் http://www.uyirmmai.com/uyirosai/