Monday, September 29, 2008

நடிகர் விஜய்யின் அப்பாவிடம் கேட்ட மறக்க முடியாத கேள்வி

திரைகளுக்குப் பின்னே
தமிழ் மகன்

நான் சினிமா நிருபராகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை.
தினமணியில் திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நேரம். நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் (அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர்) ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார்.
விஜய்யின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய நேரம். `பூவே உனக்காக', `ப்ரியமுடன்', `ஒன்ஸ்மோர்' என்று படங்களின் வெற்றிப் பட்டியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் மகனுக்குத் திருமணம் வைத்திருந்தார். திருமணத்துக்கு ஆசிரியரை வரவேற்கத்தான் அவர் வந்திருந்தார்.
``பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன்.அவசியம் நீங்கள் வந்திருந்து வாழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ``இவர் எங்கள் சினிமா எடிட்டர். இவர் வருவார். எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை'' என்று என்னைக் கைகாட்டினார்.
பிறகு பொதுவாக சினிமா பற்றி பேசினார்கள். எடிட்டர் ஒரு முறை சிவாஜிகணேசனைச் சந்தித்திக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார். கிளம்பும்போது சிவாஜி ``தீர்த்தம் சாப்பிட்டுட்டுப் போறீங்களா'' என்றாராம்.
அவரும் சிவாஜிகணேசன் பற்றி ஏதோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
கிளம்பும்போது எடிட்டர் மறக்காமல் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டார், அவருடைய ஞாபக சக்தி வலுவானதாக இருந்தால்.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

வலது சாரி அரசியலின் மூன்று முகங்கள்
மாயா

இந்திய வலது சாரி அரசியலைப் பற்றிய கட்டுரையில் அத்வானி, மோடிக்கு அடுத்து அப்துல் கலாமின் பெயர் ஏன் இடம் பிடித்தது என்று பலருக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படலாம். கேட்க பொருத்தமில்லாதது அந்த பெயர் வரிசைதான் இன்று வலது சாரி அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வைத்திருக்கும் வியூகம். 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஐந்து ஆண்டுகளாக தில்லியில் நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏற்கனவே பா.ஜ.கவின் வெற்றிக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் பா.ஜ.க அதோடு திருப்தியடையவில்லை. தங்களது வனவாசத்தை முடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க ஒரு சாத்வீகமான முகம், ஒரு இந்துத்துவா முகம், ஒரு பயங்கரவாத எதிர்ப்பு முகம் என்ற மூன்றைக் கொண்டு களமிறங்குகிறது.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/


மனம் பிறந்த சட்டங்கள்
ஆர். அபிலாஷ்
இந்திய கற்பழிப்பு சட்டம் கற்பழிப்பாளர்களுக்கு பலவகைகளில் ஆதரவானது. உதாரணமாய் இதைப் படியுங்கள்.
பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம்: "ஒரு ஆண் கற்பழிப்பு அல்லது வற்புறுத்தப்பட்ட பாலுறவுக்காய் நீதிவிசாரணை செய்யப்படும்போது, குற்றத்துக்கு பலியானவர் பொதுவாய் ஒழுக்கமீறியவராய் காட்டப்படலாம்"
அதாவது பாலியல் ஒழுக்கம் மீறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை செல்லுபடியாகாது என்று இச்சட்டம் சொல்லுகிறது. இங்கு ஒழுக்கம் என்ற வார்த்தையை கவனிக்கவும்.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

ஒரு பால் உறவு: ஏனிந்த பதட்டம்?
வாஸந்தி

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில் பல சூடான விவாதங்கள் அங்கு அரசியல் பரிணாமம் பெற்றன. அதில் முக்கியமான ஒன்று ஓரினத் திருமணங்கள். காலிஃபோர்னியாவில் அப்படிப்பட்ட திருமணங்கள் நடத்த மேயர் அனுமதி அளித்தவுடன் நூற்றுக்கணக்கான ஓரின ஜோடிகள் அங்கு பதிவு செய்துகொள்ள விரைந்தார்கள். வாஷிங்டனில் இருந்த ரிபப்ளிகன் அரசு அரண்டு போயிற்று. கிறித்துவ மதகுருமார்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஓரின உறவே தவறு என்கையில் ஓரின திருமணத்தை எப்படி அனுமதிப்பது? 'மீண்டும் ஜனித்த கிறித்துவர்" என்று சொல்லப்படும் அதிபர் புஷ் இத்தகைய திருமணங்கள் இயற்கைக்கு விரோதமானவை என்றார். திருமண பந்தம் பதிவு செய்யப்பட்டாலே அமெரிக்காவில் அன்றாட வாழ்விற்கு சௌகர்யம். சில சலுகைகள் உண்டு. அதனாலேயே ஓரின் உறவு வைத்து குடும்பம் செய்பவர்கள் அதை முறைப்படி சட்டப்பதிவு செய்து கொள்ள ஆர்வப்பட்டார்கள். அங்கு ஓரின உறவுகளின் இருப்பு ஓரளவுக்குப் பழகிப்போன விஷயமாக ஏற்கப்பட்டிருந்தாலும் சகஜமான விஷயம் இல்லை. பழமைவாதிகள் அதை அங்கீகரிக்க இன்றும் மறுத்து வருவது வியப்பில்லை. முற்போக்கு வாதிகளாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் ஜனநாயக வாதிகளும் அதை முழுமையாக ஏற்கவில்லை.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

முகேஷ் அம்பானி-அனில் அம்பானி: அபூர்வ சகோதரர்கள்
மனோஜ்
போட்டுக் கொடுப்பதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நேரடியாக போட்டுக் கொடுப்பது. மற்றொன்று, போகிறபோக்கில் நாசூக்காக போட்டுக் கொடுப்பது. முகேஷ் அம்பானி இரண்டாம் வகை. அவர் போட்டுக் கொடுத்தது தன் தம்பியைத்தான். எங்கே, எதற்கு என்று போவதற்கு முன் உலகின் பணக்கார சகோதரர்களின் குடும்பக் கதைக்குள் கொஞ்சம் சென்று வரலாம். இந்தியாவின் மிகப்பெரும் பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய திருபாய் அம்பானியின் செல்ல புதல்வர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. அப்பாவிடம் அமைதியாக அடங்கி, ஒடுங்கி மும்பையில் வளர்ந்தவர்கள்


தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

இன்னும் பல சிறப்பு ஆக்கங்களுடன்

இந்த வார உயிரோசை இதழ் உங்களுக்காக.........................
http://www.uyirmmai.com/