Tuesday, September 09, 2008

உயிரோசை இந்த வார இதழில்...

உயிர்மை.காம் வழ்ங்கும் உயிரோசை வார இதழ் தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளின் பங்களிப்புகளோடு செப்டம்பர் 1 முதல் வெளிவந்துகொண்டிருக்கிறது. திங்கள்கிழமை தோறும் பதிவேற்றம் செய்யப்படும் உயிரோசையின் இரண்டாம் இதழில் பின்வரும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. சிந்தனைக்கும் வாசிப்பனுபவத்திற்குமான ஒரு முழுமையான வார இதழ் உயிரோசை.

http://www.uyirmmai.com/

உயிரோசை 8.9.2008 இதழில்..............


கட்டுரை
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
அரங்கத்தின் விளக்குகளெல்லாம் அணையவும் நம் முன்னால் இருக்கும் வெள்ளித் திரையில் நம்முடைய முழு எதிர்பார்ப்புகளும் குவியவும் செய்கிற அந்த நிமிடத்துக்கு இணையாக வேறொன்றும் கிடையாது என்று சொல்கிறார் பிரபல திரைப்பட விமரிசகியான பவுலின் கீல். நிஜம்தான். அதுபோல வேறொரு நிமிஷம் இல்லைதான். சினிமா போல வேறொரு அனுபவமும் இல்லை.
-சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
பருவக் கால ஓட்டத்தால் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் கோஸி நதி இந்த வருடம் ஏற்படுத்திய அழிவை, துயரம் என்று சாதாரணமாக வகைப்படுத்த முடியாது. இமய மலையிலிருந்து வட இந்தியாவின் சமவெளிக்குக் கிழக்கு பீகார் வழியாகச் செல்லும் தனது வழக்கமான பாதையிலிருந்து விலகி சற்றும் சம்பந்தமில்லாத மேற்கு பீகாரில் புகுந்து, வீடுகள், வயல்கள் வழியாக தனக்குப் புதிய பாதை அமைத்துக்கொண்டு கடலைத் தேடி ஓடுகிறது கோஸி. அதன் பாதையிலிருந்து பெரும்பாலான மனித நாகரிகத்தின் தடங்கள் துடைத்தகற்றப்பட்டுவிட்டன.
-மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
பிரித்தனில் புகலிடம் தேடிய சல்மான் ருஷ்டியின் பாதுகாப்புக்காக பிரித்தானிய அரசு நியமித்த பாதுகாப்புப் படையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் இவான்ஸ். அந்த அனுபவங்களைத்தான் புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. அதில் தன்னைப் பற்றி எழுதியிருப்பவை அவதூறுகள்; தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கமேற்படுத்தும் நோக்கத்தில் இட்டுக்கட்டியவை. தன்னுடைய ஆளுமையை அவமதிக்கும் வகையில் கற்பனையான தகவல்களால் திணிக்கப் பட்டவை. இது ருஷ்டியின் வாதம்.
-சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
இந்தியா 'மகத்தான' வெற்றி பெற்றிருக்கிறது. அணு எரிபொருள் வாங்க 34 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கிவிட்டது. 45 நாடுகள் கூட்டமைப்பு பெரிய மனது வைத்து அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. இனி அணு உலைகளில் எரிபொருளைப் போட்டு மின்சார உற்பத்தியை பெருக்கி நாட்டை ஜொலிக்கச் செய்யலாம். அப்புறம் மெதுவாக வல்லரசாகி விடலாம்.
சமீபத்தில் இத்தனை திடுக்கிடும் திருப்பங்களுடன் எந்த உலக நிகழ்வும் நடந்ததில்லை.
-மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு விவாகரத்துக் கோரிக்கையை நிராகரித்த வழக்கு அதற்குச் சரியான உதாரணம். பதினாறு ஆண்டுகளாக நரேந்திர குமார் வர்மா என்ற நபர் தன் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருபவர். மணவாழ்வு முறிந்து ஒரு தம்பதி பத்தாண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்திருந்தால் விவாகரத்துப் பெறுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும் என்றுதானே நாம் நினைப்போம்? அதுதான் இங்கு இல்லை. இந்திய விவாகரத்துச் சட்டத்தின்படி, தம்பதிகளின் பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் போனால் விவாகரத்து கிடைப்பது, எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், மிகச் சிக்கலான விஷயம். வர்மாவின் மனைவி விவாகரத்துக்கு ஒப்பாததால் நிலுவையில் இருக்கும் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிற்று என்றாலும் கால இடைவெளியைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் முடிவுக்கு வராதது பகுத்தறிவுக்கு விரோதமானதாக எனக்குப்படுகிறது.
-வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
சின்னப் பிள்ளைகள் குறும்பு செய்யும்போது, 'பூச்சாண்டி' கிட்டே பிடிச்சுக் கொடுத்துடுவேன் என மிரட்டுற குரலை கிராமங்களில் அடிக்கடி கேட்கலாம். யார் அந்தப் பூச்சாண்டி? ஆள் எப்படி இருக்கும்? என்று யோசிப்பதைவிட அரூபமாக மனத்தில் தோன்றும் பயம்தான் குழந்தையைப் பாடாய்ப் படுத்தும். அப்படி இன்னொரு பெயர்தான் 'பள்ளிக்கூடம்'.
-ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாய் நெசவு என்ற தொழிலும் இன்று இயந்திரமாகிவிட்டதால் வீட்டில் தறிப்போட்டு பாய்களை நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இன்று வேலை இன்றி தெருவில் நிற்கிறார்கள். தென்மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்களே பெரும்பாலும் பாய் நெசவுத்தொழிலைச் செய்து வந்தார்கள்.
-கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
-அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
-ஜெயந்தி சங்கர்
சிறுகதை
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
-கே.பாலமுருகன்
கவிதை
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
-கோகுலன்
பசித்தலையும் சுயம்
-எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
-செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
-த.அரவிந்தன்
மெளனத்தின் மொழி
-றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
-ஆலன் ஸ்பென்ஸ்
அறிவிப்புகள்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
--
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
-இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
--
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
--
பழமொழிகளும் சொலவடைகளும்
பழமொழிகளும் சொலவடைகளும்
அச்சாணி இல்லாத தேர்; முச்சாணும் ஓடாது.
அஞ்சாவது (பிறக்கும்) பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
-கழனியூரான்
நிகழ்வுகள்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
--
கடித இலக்கியம்
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
இந்தத் தொகுப்பைப் படித்து முடித்ததும் சுஜாதாவின் இதற்கான முன்னுரையைப் படித்தேன். உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை இந்தத் தொகுதியின் பின் பகுதியிலும் கனவு இதழிலும் படித்தேன். செகாவுக்கு எதிர்மறையாக எப்படி அசோகமித்திரனும் அவர் போன்று எழுதுபவர்களும் படைக்கிறார்கள் என்று மழுப்பலாக எழுதிய க.நா.சு. வின் விமர்சனம் ஒன்றை தினமணியில் படித்தேன். அப்புறம் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
-கந்தர்வன்
சிற்றிதழ் பார்வை
புத்தகம் பேசுது
--
புது நூல்கள்
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
-தாஜ்
உங்கள் கருத்துக்கள்
உங்கள் கருத்துக்கள்
-எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com