Sunday, September 14, 2008

தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்


டைம்ஸ் ஆஃப் இந்தியா இன்று helpless? என்ற தலைப்பில் தில்லி குண்டுவெடிப்புகள் பற்றிய செய்தியினை வெளியிட்டிருக்கிறது. இந்த தலைப்பின் பின் இருக்கும் அச்சமும் நம்பிக்கையின்மையும் நாடு முழுக்க பரவிவரும் பீதியின் அடையாளங்களே. இது தொடர்கதையாகிவிட்டது. மீண்டும் அப்பாவிகளும் எளிய மக்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். நடைபாதையில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொல்லபட்ட பின்பு எஞ்சிய ஒருவர் கேட்கிறார் நாங்கள் என்ன தவறு செய்தோம்?' என்று.
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். ஏதோ இது சட்ட ஒழுங்கு பிரச்சினை என்பதுபோல. இந்த அபத்தமான பல்லவி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின்போதும் பாடப்படுகிறது. இந்த பயங்கரவாத வலைப் பின்னலை கண்டுபிடிக்க முடியாத மொத்த அரசு அமைப்பின் தோல்வியை கொடூரமான சட்டங்களை இயற்றுவதன் வாயிலாக தடுத்து நிறுத்தமுடியாது. இந்தக் குற்றங்களை இழைப்பவர்களின் தொடர்புகளும் அதற்கு பின் இருக்கும் மனோபாவமும் எல்லா சட்டரீதியான அச்சுறுத்தல்களையும் கடந்தவை.....

இக்கட்டுரையை தொடர்ந்து வாசிக்க வாருங்கள் உயிர்மை இணைய தளத்தின் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு...

http://www.uyirmmai.com/

தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்