Tuesday, September 23, 2008

சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்


சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்...

தமிழவன்


பாரதியாருடைய காலத்தில் சங்க இலக்கியம் ஓரளவு பரவி எல்லோர் கவனத்தையும் கவர்ந்தாலும் பெரும்பான்மை பிராமணர்களைப் போல பாரதியும் சங்க இலக்கியத்தால் பாதிப்படையவில்லை. அவருடைய காலத் தமிழ் முழுசும் சங்க இலக்கியத்தால் பாதிப்பு அடையவில்லை. பாரதி தாசன் எப்படித் தன் இலக்கியத்தை முழுமையாய் சங்க இலக்கியத்துக்குள் கொண்டுவந்தாரோ அந்த அளவு பாரதியைச் சங்க இலக்கியப் படிப்பு பாதிக்காத சூழல் அன்று இருந்திருக்கிறது. ஆனால் பாரதி காலம் வரை தமிழில் இல்லாத அனைத்திந்தியா, ஒரு சிந்தனைச் சட்டகமாய்த் தமிழிலக்கியத்தில் பாரதி காலத்தில் வருகிறது. இதற்கு இலக்கியக்காரணம் இல்லை; அரசியல் காரணம் இருக்கிறது. சுதந்திரப் போர் தமிழில் அதுவரை இல்லாத ஒரு விஷயத்தை - அனைத்திந்தியாவை - கொண்டுவந்து சேர்க்கிறது. காங்கிரஸ் கட்சி 1967-ல் தமிழகத்தில் வேரறுக்கப்பட்டதற்கும் அன்றிலிருந்து தமிழ்ப்பண்பாட்டை அது பாதிக்காத ஒரு வடநாட்டுக் கட்சியாகவே தொடந்து மிளிர்வதற்கும் ஆழமான பண்பாட்டுக் காரணம் இருக்கிறது. எல்லோரும் அரசியல் காரணம் என்று கருதினாலும் அது அரசியல் காரணமல்ல; பண்பாட்டுக் காரணம்- அதாவது சங்க இலக்கியம் தன்னைத் தமிழ் மண்ணில் நிலைநிறுத்திய செயல்தான் 1967-இலிருந்து காங்கிரஸ் பண்பாட்டைத் தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தது. 1905 வாக்கில் பாரதிமூலம் தொடங்கப்பட்ட ஒரு - அனைத்திந்திய - அடையாளத்தை, சங்க இலக்கியம் கடந்த சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாற்றியுள்ளது. இதற்கு மாற்றான அனைத்திந்திய பிரதேசங்களின் பண்பாட்டைக் கொண்டு வரும் அனைத்தியக் கடமையைச் செய்யாததே திராவிடக்கட்சிகளின் அனைத்திந்தியத் தோல்வி. முரசொலி மாறனை அவருடைய மாநில சுயாட்சி என்ற சிறப்புப்புத்தகம் சார்ந்து நினைவுநாள் கொண்டாடாமல் வேறு முறையில் கொண்டாடியபோதே திராவிடச் சிந்தனை இந்திய அரசியலில் உயர்ந்தோர் எதிர்பார்த்த பயனைத் தராமல் தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது தெரிந்தது. ஓரளவு வி.பி. சிங் மூலமும், மாயாவதி மூலமும் திராவிடச்சிந்தனைகள் அனைந்திந்தியாவுக்கும் போன ஆரம்பக்கட்டம் முடிந்துவிட்டது போலுள்ளது

முழுமையாக படிக்க
வாருங்கள் உயிரோசை இந்த வார இதழுக்கு...
http://www.uyirmmai.com/