Monday, April 04, 2005

புதிய கவிதைகள்-3

Image hosted by Photobucket.com

உன் கண்கள்
இங்கே எதையுமே
பார்ப்பதில்லை

ஒழுங்குகளை
ரகசியங்களை
பலவீனங்களை
எப்போதும் கசிந்துகொண்டிருக்கும்
காயங்களை

ஒன்றையும்
அவை உற்றுப் பார்ப்பதில்லை.

உன் கண்கள்
கண்களை மட்டுமேசந்திக்கின்றன.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

No comments: