Tuesday, April 05, 2005

புதிய கவிதைகள்-4

Image hosted by Photobucket.com


நடக்கலாம்
கால் வலிக்கும்போது கொஞ்சம் உட்காரலாம்
பேசலாம்
வெறுமை சூழும்போது மெளனமாக இருக்கலாம்
கைகளை பற்றிக் கொள்ளலாம்
பயம்வரும்போது கைகளை விலக்கிக் கொள்ளலாம்
ஒரு ஒரு முறை முத்தமிடலாம்
முத்தத்தைப் பற்றி பேச்சு வந்துவிடாமல்
வேறு ஏதாவது பேசலாம்

அவரவர்
வீடு நோக்கிப் போகலாம்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

No comments: