Wednesday, April 06, 2005

புதிய கவிதைகள்-6

Image hosted by Photobucket.com


எல்லோரும்
யாருடனாவது இருந்துகொண்டிருக்கிறார்கள்

தொடுகிற ஒவ்வொரு கையிலிருந்தும்
ஒட்டுகிறது யாரோ ஒருவரின் வியர்வை

எந்தப் பாதையிலும் பின்தொடராமலில்லை
ஏதோ ஒரு காலடிச் சத்தம்

எல்லா இணைப்புகளும்
உபயோகத்தில் இருக்கும்
இந்தத் தொலைபேசியில்
நான் உன்னை வந்தடையும்போது
ஒரு பருவம் கழிந்திருக்கும்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

1 comment:

Anonymous said...

//எல்லோரும் யாருடனாவது இருந்துகொண்டிருக்கிறார்கள்//

மிகச் சரி. இதை நான் உணர்ந்து கொண்டிருக்கின்றேன்.