Wednesday, February 09, 2005

சுந்தர ராமசாமிக்கு இவ்வளவு கோபம் அவசியமா?

ஜெயேந்திரர் கொலை செய்தாரா இல்லையா என்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினையாகிவிட்டது அது தொடர்பாக சுந்தர ராமசாமி வெளியிட்ட ஒரு அறிக்கை. அந்த அறிக்கையில் இப்பிரச்சினையில் தமிழ் எழுத்தாளர்கள் குரல்கொடுக்க வேண்டும் எனக் கேட்டு தமிழ் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையை பெரும்பாலான பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை. தினமணி மட்டும் அதன் சிலவரிகளை உருவி ஒரு மூலையில் பிரசுரித்திருந்தது. இதைக் கண்டித்து சுரா அவர்கள் தீராநதியில் தனது அறிக்கைக்கும் இதன் வழியாக தமிழ் எழுத்தாளர்களுக்கும் வெகுசன ஊடகங்கள் இழைக்கும் அநீதி குறித்தும் இப்பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மேலும் விரிவாக விளக்கியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நீதிகேட்கும் அக்கட்டுரையும் சிலபகுதிகள் குறைக்கப்பட்டு தீராநதி இதழில் வெளிவர, சுரா இது தொடர்பான மிக விரிவான ஒரு ஆவணத்தை காலச்சுவடு இதழில் பிரசுரித்திருக்கிறார். தனது தினமணி அறிக்கை, தீரா நதி கட்டுரை, அதில் எடிட் செய்யப்பட்ட பகுதிகள் (பெரிய எழுத்தில்), மேலும் கொஞ்சம் தனது நிலைப்பாடுகள், நியாயங்கள், தமிழ் சூழலின் அவலங்கள் என விரியும் அந்த ஆவணம் சங்கர ராமன் கொலைவழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் அளவுக்கு விரிவான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது. தமிழ் வாசகன் இந்த ஆவணத்தைப் படித்து தெரிந்துகொள்வது என்ன என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். இதை ஒட்டி மேலும் சில விஷயங்களை நாம் யோசித்துப் பார்க்கலாம்.

நவீன தமிழ் எழுத்தாளர்களின் 'சமூக அக்கறை' குறித்த கேள்விகள் தமிழில் இடது சாரிகளால் தொடர்ந்து எழுப்பட்டு வந்திருக்கின்றன. பல சமயங்களில் அவை சமூக அக்கறையை கோஷங்களாக சுருக்கிப் பார்க்கும் கொச்சையான கேள்விகளாகவே இருந்திருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் தமிழ் சமூகத்தை பற்றி நவீன எழுத்தாளர்களுக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது என்பதுபோலவே இடதுசாரிகளுக்கும் எதுவும் தெரியாது என்பதையே இவ்விரு தரப்பாரும் எழுதி வந்திருக்கும் பெரும்பாலான இலக்கிய பிரதிகள் உறுதி செய்கின்றன.

ஆனால் அதே சமயம் சமூகத்தின் முக்கியமான நெருக்கடிகள் குறித்து தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏதாவது அபிப்ராயம் இருந்திருக்கிறதா என்ற கேள்வியை முற்றிலும் நியாயமற்றது என்று நாம் ஒதுக்கிவிடமுடியாது. கருத்துச் சொல்வது ஒன்றும் கட்டாயமோ நிர்பந்தமோ அல்ல. ஆனால் சமூகத்தின் மனசாட்சி தூங்கும்போது அவற்றை கலைப்பதில் கலைஞர்கள் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறார்கள். இதற்காக படுகொலைகளுக்கும் நாடு கடத்தல்களுக்கும் இன்ன பிற கொடுங்கோன்மைகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனித விரோத செயல்பாடும் கலைஞனின் பாதையில் குறுக்கிடுவது கலையின் தவிர்க்க முடியாத விதி. ஆனால் நவீன தமிழ் எழுத்தாளர்களின் பாதையில் இதெல்லாம் எப்போதாவது இடறியிருக்கிறதா என்று யோசிக்கவேண்டும். அரசியல் செயல்பாடுகளோடு நேரடியாக தொடர்புடைய எழுத்தாளர்களைத் தவிர்த்து பிறரது மெளனங்கள் மிக ஆழமாக பதிவாகியிருக்கின்றன.

மொழிப் போராட்டம், வெண்மணிப் படுகொலை, நெருக்கடி நிலை, தர்மபுரியில் நக்சல்பாரி இளைஞர்கள் மீது எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்திய சட்டவிரோத கொலைகள், சாதிக் கலவரங்கள், தலித்துகள் மீதான படுகொலைகள், இந்தியா முழுக்க இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது நடத்திவரும் தாக்குதல்கள், கடந்த சில ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு ஆடிய பல்வேறு கோரத் தாண்டவங்கள் என எத்தனையோ பிரச்சினைகளில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஒரு வாக்கியம் கூட எழுதியதில்லை. எந்த அரங்கிலும் இதைப் பற்றி மூச்சுவிட்டதில்லை. இதை பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதற்கு ஒருவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் திடீரென பொங்கி எழும் சமூக ஆவேசம்தான் இங்கே பிரச்சினையாகிறது. இந்த ஆவேசத்திற்கு பின்னிருப்பது ஒரு சமூக பிரச்சினையா அல்லது சமூகத்தில் தன்னுடைய இடம் குறித்த பிரச்சினையா?

சங்கராச்சாரியார் விவகாரம் ஒரு குற்றம் தொடர்பான பிரச்சினை. இதற்கு பின்னிருக்கும் நோக்கங்கள் இன்னும் யாருக்கும் சரிவரத் தெரியாத நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் என்ன நிலைப்பாடுகளை எடுப்பது?அசட்டுத்தனமான நிலைப்பாடுகள் எடுப்பது ஜனநாயக உரிமை என்றாலும் எல்லா நிலையிலும் அந்த உரிமையை பயன்படுத்த வேண்டுமா?
தமிழ் எழுத்தாளர்களுக்கு வெகுசன அபிப்பராயங்களில் குறுக்கிடும் அதை பாதிக்கும் சமூக செல்வாக்கு எதுவும் கிடையாது. இதற்கு தமிழ் சமூகத்தின் சீரழிவை மட்டும் நாம் காரணம் காட்டிவிட முடியாது. தமிழ் எழுத்தாளர்கள் வெகுசன இயக்கங்கள் எதிலும் எக்காலத்திலும் தொடர்புகொண்டவர்கள் அல்ல. வெகுசன ஊடகங்களில் அவர்களது புகைப்படங்களோ நேர்காணல்களோ வெளிவருவதனால் அவர்கள் வெகுசன அபிப்ராயங்களை பாதிப்பவர்களாக மாறிவிட முடியாது. தமிழ் சமூகத்திற்கு அவர்களுடைய அபிப்ராயங்கள் தேவைப்படுவதில்லை. ஜெயேந்திரர் கைது வழக்கில் சுந்தர ராமசாமியோ அசோகமித்திரனோ என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு வாசகருக்கு அக்கறை இருக்குமெனில் இப்பத்திரிகைகள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கவே செய்யும். இந்த முக்கியத்துவம் இடையறாத சமூக செயல்பாடுகளின் வழியே உருவாகும் சமூக அதிகாரம். சுந்தர ராமசாமியின் புகைப்பட கண்காட்சி அல்லது அவரது ஐம்பதாண்டு திருமண நிறைவு விழா பற்றி செய்திகள் வெளியிடும் தமிழ் வெகுசன ஊடகங்கள் ஒரு முக்கியமான பிரச்சினையில் அவரது கருத்தை ஏன் பொருட்படுத்த மறுக்கின்றன என்பதை நாம் ஆழமாக யோசிக்க வேண்டும்.

அறிக்கைகளை வெளியிடும் விதம் குறித்து பத்திரிகைகள்மேல் கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட தொடர்ந்து குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர். பத்திரிகைகளுக்கு சில நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் நவீன சிறுபத்திரிகைகள் அளவுக்கு உள்நோக்கங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. வெகுசன பத்திரிகைகள் எதை முக்கியப்படுத்துகின்றன என்பதற்கு எந்த தர்க்க விதிகளும் இல்லை.

எல்லாவற்றையும்விட ஒரு பத்திரிகையில் ஒரு கருத்து வெளிவருவது அல்லது வெளிவராமல் போவது இரண்டிற்கும் ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?
எழுத்தாளர்கள் அறிக்கைகள் வெளியிடுவதில் வேறு சில பிரச்சினைகள் இருக்கின்றன. சமீபகாலங்களில் சில பிரச்சினைகள் குறித்த எழுத்தாளர்களின் கூட்டறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. இந்த அறிக்கைகளில் கையெழுத்திடுமாறு தமிழ் எழுத்தாளர்களை கேட்கும்போது அவர் அறிக்கையின் உள்ளடக்கம் பற்றிக் கேட்கிறாரோ இல்லையோ முதலில் கையெழுத்திட்டுள்ள பிற எழுத்தாளர்கள் பற்றிக் கேட்பார். அவர் முற்றிலும் வெறுக்கிற ஒரு எழுத்தாளர் அதில் கையெழுத்திட்டிருந்தால் அப்பிரச்சினையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வார். அதேபோல இந்த அறிக்கைகளுக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு யாரையெல்லாம் கருத்துக் கேட்கவேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. கூட்டுச் செயல்பாடு பெரும்பாலும் ஒரு குழுச் செயல்பாடுதான். இவையே தமிழ் எழுத்தாளர்களின் சமூகக் குரலின் பின்னிருக்கும் உள்போராட்டங்கள்.

சமீபத்தில் எழுத்தாளர் ப. செயப்பிரகாசம் தொலைபேசியில் அழைத்து 'சுனாமியின்போது தமிழ் தொலைகாட்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகளை நிறுத்தாமல் நடத்தியது பற்றி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிடப் போதாகவும் அதில் கையெழுத்திடுமாறும் கேட்டார்.

நல்ல வேளையாக சுனாமியை கண்டித்து தமிழக எழுத்தாளர்கள் இன்னும் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

மனுஷ்ய புத்திரன்
manushyaputhiran@yahoo.com

24 comments:

Anonymous said...

/மொழிப் போராட்டம், வெண்மணிப் படுகொலை, நெருக்கடி நிலை, தர்மபுரியில் நக்சல்பாரி இளைஞர்கள் மீது எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்திய சட்டவிரோத கொலைகள், சாதிக் கலவரங்கள், தலித்துகள் மீதான படுகொலைகள், இந்தியா முழுக்க இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது நடத்திவரும் தாக்குதல்கள், கடந்த சில ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு ஆடிய பல்வேறு கோரத் தாண்டவங்கள் என எத்தனையோ பிரச்சினைகளில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஒரு வாக்கியம் கூட எழுதியதில்லை./

ம்ம்ம்.. நாற்சார்மடத்துச்சாமியும் அவரது நொண்டிநாயும் என்று ஜெயமோகன் என்ற தலைவீங்கியின் வளர்ப்புப்பிராணி வேதசகாயகுமார் எழுதியபோது, தமிழ் எழுத்தாளர்கள் இணையம்பூராக கையெழுத்து வேட்டை நடத்தியது இணையத்திலேயிருக்கும் பலருக்கு ஞாபகம் இருக்கும்போது, புதிதாய் முளைத்த புத்தகவியாபாரி ஒருவருக்கு அது ஞாபகம் இல்லாமல், ஆக எம். ஜி. சுரேஷ் எழுதின மிருகம் மட்டுமே நாலுபக்கம் உயிர்மையாகத் திட்ட ஞாபகம் இருக்கும். காலச்சுவட்டிலே கருணாநிதி புராணம், கருணாநிதி இரவிலே கைது செய்து ஏற்றப்பட்டபோது புலம்பியவர்களுக்கு ஜெயமோகனினதும் சுஜாதாவினதும் புத்தகம் பதிக்கும்போது, கருணாநிதி, ஜெயலலிதா, கோபாலசாமி எல்லோருமே கயவர் என்று எழுதுகின்ற புத்தி வந்துவிடும். சுந்தரராமசாமி எந்தளவு சரியான மனிதர் என்பது வேறுவிடயம். ஆனால், இந்த விடயத்திலே தினமணியிலும்விட சுந்தரராமசாமி நம்பிக்கை குறைந்தவர் என்று அவரின் சுவட்டிலே காலத்திலே பின்னாலே நடந்தவர்கள் இன்றைக்குச் சொல்வது விசித்திரமல்ல. எம். ஜி. சுரேஷ் சொன்னபோது, அசிங்கமாக இருந்தாலுங்கூட, இப்போது அது சரிதானோ என்றுதான் படுகின்றது; "கல்க்கண்டுக்கு வாசகர் கடிதம் எழுதி இலக்கியம் பண்ணப்புகுந்தவர்களிடம்" மணிமேகலைப்பிரசுரப்புத்தியைத்தான் எதிர்பார்க்கமுடியும்.

மனுஷ்யபுத்திரன், நீங்கள் மிகவும் சுவராசியமான மனிதராக இருக்கின்றீர்கள்.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
உயிர்மை said...

இருட்டில் கல்லெறிந்துவிட்டு ஓடும் அநாமதேயங்களுக்கும் வெறுப்பை உண்டு வாழும் புழுக்களுக்கும் அபிப்ராயங்களின் உலகில் எந்த இடமும் இல்லை. அவர்களுக்கு எந்த பதிலும் யாரும் சொல்லவேண்டியதில்லை.

மனுஷ்ய புத்திரன்

மாலன் said...

நல்ல பதிவு.

ஒருமுறை கேரளத்தில், திரூரில் நடந்த துஞ்சன் எழுத்தச்சன் விழாவில் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் நடந்த ஒரு கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுகிதகுமாரி என்ற முன்னணிக் கவிஞரும் அழைக்கப்பட்டிருந்தார். சுகிதகுமாரி, மிகத்தாமதமாக நிகழ்ச்சி முடியும் நேரத்திற்கு வந்தார். மற்ற மலையாள எழுத்தாளர்கள் அவரிடம் ஏன் தாமதம் என்று கேட்டார்கள். ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி, அங்கு "கள்ளுக்கடை மறியலுக்காகப் போயிருந்தேன். போன இடத்தில் பிரசினையாகிவிட்டது. வரமுடியாது போய்விடும் என்றே நினைத்தேன். அப்படி வரமுடியாது போனால் அதை மற்ற மொழிகளிலிருந்து வந்திருக்கும் எழுத்தாளர்கள் அவமரியாதையாகக் கருதுவார்களோ என்றும் நினைத்துக் கொண்டேன். நல்லவேளை பிரசினை முடிந்தது" என்றார் அவர். அவ்ருக்கு கவிதையை விடக் கள்ளுக்கடை போராட்டம் முக்கியமாக இருந்தது.

மகாஸ்வேதாதேவி என்ற வங்கமொழி எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஒருமுறை சென்னைக்கு வந்த அவர், என்னை தொலைபேசியில் அழைத்து, ஒரு செய்தியாளர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகளில் உதவ முடியுமா என்று கேட்டார். என்ன தீதி என்ன விஷயம் என்றேன். தீதி (அக்கா) என்றுதான் நான் அவரை அழைப்பது வழக்கம். முதன் முதலாக பட்டதாரியான மலைவாசி இளம்பெண் ஒருவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டு, தற்கொலை செய்து கொண்டார். அதைக் குறித்து செய்தியாளர்களிடம் பேச வேண்டும் என்றார். மலைவாசிகளின் மேம்பாட்டிற்காக அவர் உழைத்து வருகிறார்.

சிவராம் காரந்த் தனது எண்பது வயதிலும் சுற்றுச் சூழல் பிரசினைகளில் மக்கள் விழிப்புணர்வு பெற இயக்கம் நடத்தி வந்தார். பல கன்னட எழுத்தாளர்கள் கன்னட மொழி அரசியல் அதிகாரம் பெறுவதில் முனைப்பாகப் போராடியவர்கள். அனந்தமூர்த்தி நெருக்கடிநிலைக்காலத்தில் களம் இறங்கிப் போராடியவர்.

ஆனால் தமிழில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் வேறு: இராக் போரின் போது யுத்தத்திற்கெதிரான ஒரு பேரணி உலகம் எங்கும் நடைபெற்றது. பல நகரங்களில் பல எழுத்தாளர்கள், பல கலைஞர்கள் பங்கு கொண்டார்கள். சென்னையிலும் அது போன்ற ஒரு பேரணிக்கு நானும் இந்துப் பத்திரிகை ஆசிரியர் ராமும், ஏசியாநெட்டின் முன்னாள் தலைவர் சசிக்குமாரும் ஏற்பாடு செய்தோம். கலந்து கொண்ட எழுத்தாளர்கள், கவிஞர்.அப்துல் ரகுமான், பா.செயப்பிரகாசம் ஆகிய இருவர் மட்டுமே. ஊர்வலம் முடிகிற நேரத்தில் மதன் வந்து கலந்து கொண்டார். யுத்தத்திற்கு எதிராக பலர் பல கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார்கள். நானே ஒரு 15 கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியிருப்பேன். சென்னையில் உள்ள மலையாள சமாஜம் என்ற கலாசார அமைப்பு கூட இந்த ' அரசியல்' விஷயம் பற்றிப் பேச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தவிர வேறு இலக்கிய அமைப்புகள் எதுவும் இதில் அக்கறை காட்டவில்லை.

யுத்தம் எங்கோ நடக்கிறது என்ற மனோபாவம் காரணமாக இருக்கலாம் என்று சொல்வதற்கில்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பது, அந்தப் பொருட்களுக்கெதிரான விழிபுணர்வை ஏற்படுத்துவது போன்ற விஷயங்களில் நானும் சிவசங்கரியும் அக்கறை காட்டி வந்த போது யாரும் துணை நிற்க முன் வரவில்லை என்பது மட்டுமல்ல, ஏளனத்திற்கும் உள்ளாகியிருக்கிறோம்.

எமெர்ஜென்சியின் போது அதை எதிர்த்து இந்திய மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகளை ஆலிவர் பெரி என்ற அமெரிக்கப் பேராசிரியர் Voices of emergency என்று ஒரு நூலாகத் தொகுத்திருக்கிறார். அதில் உள்ள தமிழ்க் கவிதைகள் எவ்வளவு என்பதை அதை எடுத்துப் பார்த்தால் தெரிந்துவிடும்.

தமிழ் எழுத்தாளர்களுக்கு சமூக உணர்வு என்பது குறைவா அல்லது அதை வெளிப்படுத்தும் முனைப்புக் குறைவா என்பது ஆராய வேண்டியது. ஆனால் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிறு கேணியை உலகம் என்று எண்ணிக் கொண்டு அதில் எழும் திவலைகளை சுனாமி எனக் கருதி மிரள்கிறவர்கள் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

இந்திய விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் முனைப்போடு எழுதிக் கொண்டிருந்தவர்கள்தான் லா.ச.ராவும் மெளனியும். அதன் சுவடுகளை அவர்கள் படைப்புக்களில் காணமுடியாது. புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் நாட்டின் அரசியல் விடுதலையை முன் வைத்த தேசிய இயக்கம், சமூக விடுதலையை முன் வைத்த திராவிட இயக்கம், உழைப்பாளிகளின் விடுதலையை முன் வைத்த கம்யூனிச இயக்கம் ஆகியவை இந்தியாவில் தீவிரமாக செயல் பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அதைப் பற்றிய பதிவுகளை அவரது படைப்புகளில் காண முடியாது.

போட்டோ செஷன் வைத்துப் போஸ் கொடுத்துப் படமெடுத்து கண்காட்சி வைத்துக் கொள்வது, திருமண விழாக் கொண்டாட்டங்களை வெகுஜனப் பத்திரிகைகளில் பிரசுரிப்பது, கிசுகிசுக்கள் மூலம் (smear campaign) வியாபாரப் போட்டியாளர்களைக் குறித்து அவதூறு பரப்புவது போன்ற சினிமாக் கலாசாரத்திற்கு சிறுபத்திரிகை முன்னோடிகள் இரையாகிவிட்டார்கள். அவர்களின் நோக்கம் வெகுஜனப் பத்திரிகைகளிலிருந்து வேறுபட்டதல்ல. இரு தரப்பிற்கும் நோக்கம் ஒன்றே. வணிகம்.

என்ன குங்குமத்திற்கு விவேக். சிறு பத்திரிகைக்கு சுந்தரராமசாமி.

-/பெயரிலி. said...

ஜனாப். சாகுல் ஹமீட், என் பெயர் இரமணிதரன் கந்தையா (-/பெயரிலி என்றிருப்பது என் பதிவே). முகவரியும் வேணுமெண்டால், உயிர்மை அனுப்புகிறவர்கள் பட்டியலிலே தேடிப்பாரும். கிடைக்கும். இருட்டிலே கல்லெறிந்து போவதல்ல என் நோக்கு. ப்ளாக்ஸ்பொட்டிலே இருக்கும் அமைப்பு சிலவேளைகளிலே anonymous இற்கு வழிசமைத்துவிடும்.

/இருட்டில் கல்லெறிந்துவிட்டு ஓடும் அநாமதேயங்களுக்கும் வெறுப்பை உண்டு வாழும் புழுக்களுக்கும் அபிப்ராயங்களின் உலகில் எந்த இடமும் இல்லை./

இதைத் தாகூரின் The Gardener இனை ஒத்தியெடுத்ததுபோல நீர் எழுதின நீராலானதிலே நாலு வரிகளாக உடைத்து எழுதியிருந்தீரென்றால், கவிதை வகைக்குள்ளே விசுவாசிகள் போட்டிருப்பார்கள்; இருட்டையும் புழுக்களையும் பற்றிப் பேச உமக்கு இருக்கும் வல்லமையை விட்டுவிடுவோம். ஏனென்றால், இந்தக்கவிநுட்பமும் மனிதமும் உமக்கு மட்டுமே கைவந்தது. ஆனால், மேலே எழுதியதிலே என்ன தவறு என்பதைச் சொல்லினால், மகிழ்ச்சியடைவேன். நார்ச்சார்மடத்தினைப் பற்றிக் கண்டன அறிக்கையும் கையப்பவேட்டையும் வைத்து எழுத்தாளக்குஞ்சுகளெல்லாம் கையப்பமிட்டு எங்களுக்கு அனுப்பியபோது, நாங்கள் கையப்பமிடவேண்டும்ம். பிறகு நீங்கள் ஜெயமோகன் நூலை வெள்ளியிடும்போது, பட்டும்படாமலும் சுந்தரராமசாமியையும் தடவி, ஜெயமோகனையும் தடவுவீர்கள். நாங்கள் இளிச்சவாயர்கள் போல பார்த்துக்கொண்டிருப்போம். பிறகு ஜெயமோகன்போல மற்றவர் எல்லோரையும் மடையன் என்று கருதும் தலைவீங்கிய ஆசாமியை எம். ஜி. சுரேஷ் தட்டினால், மட்டும் சக எழுத்தாளன் பற்றிய உணர்வு பொத்துக்கொண்டு வந்து உயிர்மைக்குச் சந்தா கட்டுறவன் தலையிலே உங்கல் ஒப்பாரி ஓலங்களை வடித்து விற்பீர்கள். வேண்டுமானால், உமது இலங்கைச்"செய்தியாளர்" இளைய அப்துல்லா வரிகளிலேயே சொன்னால், "வா என வரவும் போ எனப் போகவும் நாங்கள் என்ன ஆட்டுமந்தைகளா?"

சொற்களைக் கொட்டுவது எல்லோருக்கும் வாய்க்கும். இணையம் அச்சுச்சஞ்சிகையல்ல, ஆசிரியர் விரும்பியவாறு வெட்டவும் தவிர்க்கவும்.

நீரும் இளைய அப்துல்லாவும் சேனனும் சேர்ந்துகொண்டு, இலங்கையிலிருந்து கொண்டு உயிர்மை வாசிக்கின்றவர்களுக்கு உயிர்மைமீது ஏற்படுத்தாத வெறுப்பையா நான் ஏற்படுத்திவிட்டேன்? :-(

/அவர்களுக்கு எந்த பதிலும் யாரும் சொல்லவேண்டியதில்லை./
பிறகேன் இந்தப்பதிலோ?

தெரியாமலேதான் கேட்கின்றேன் என்று வைத்துக்கொள்வோம்; சாருநிவேதிதா, சுந்தரராமசாமியை விட மிகுதி எழுத்தாளர்கள் எந்தவிதத்திலே மேலானவர் ஆகிவிட்டீர்கள்? இன்னொரு கவிஞரான ராசூலின் தலையிலே தட்டின ரூமி சாருநிவேதிதாவின் குறைகளைப் பற்றிக் காலங்கடந்து பேசுகிறார். குங்குமத்திலே விவேக் காமெடியென்று பயப்படாமலே பேசுகிறோம்; ஜெயேந்திரர் சங்கதிக்குப்பின்னாலே சன் டிவியிலே விவேக் என்னவென்று எவரும் சொல்வதற்கில்லை. இலங்கைத்தமிழர்கள் பற்றிய அவதூறுகளைப் பேசும் த இந்துவின் 125 ஆவது கொண்டாட்டத்தைப் பெரிதுபடுத்தி எழுதும் இணைய-தொலைக்காட்சிப்படைப்பாளிகள், அதற்கு மாற்றாக வந்த அஞ்சல்களிலே எல்லாவற்றினையும் பிரசுரிக்கமுடியாது ஒளித்துவிடுகின்றனர். இந்துவின் பத்திரிகைநெறிபிறழல்களை நியாயப்படுத்துகின்றனர். "சும்மா ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் என்று நாம்தான் பெயர் கொடுத்தோம்" என்று எஸ். பொன்னுத்துரை என்ற ஆசாமிக்குச் சொன்னவர்களெல்லாம் இன்றைக்கு அவரை மாதத்தொடராகச் செவ்வி எடுத்துப்போடுகின்றனர்; அந்த எஸ்.பொ என்ற வெட்கம் கெட்ட ஆசாமி ஒன்றுமில்லாதவர் போல சென்னையிலே திருவிழா கொண்டாடுகின்றார். இலங்கையிலே தடை செய்யப்பட்ட புத்தகமென்றே மொட்டையாக என்ன ஏதென்று வாசகர்கள் தெரியாமலிருக்கும்வண்ணம் போட்டு வெள்ளாவி விற்கின்ற பொய்யர்களைப் பார்க்கின்றோம். இவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள்தான். இவர்களைவிட, சாருநிவேதிதாவும் சுந்தரராமசாமியும் எந்தவிதத்திலே குறைந்துவிட்டார்களென்று எனக்குத் தெரியவில்லை. ஒரே குட்டையிலே ஊறிய மட்டைகளுக்கு பக்கத்திலே ஊறும் மட்டையைக் கிண்டல் செய்ய என்ன நியாயமிருக்கின்றது? (சுந்தரராமசாமி உயர்வு என்று சொல்லவில்லை; ஆனால், சுந்தரராமசாமியைக் கிண்டல் செய்யும் மனிதர்கள் தமது நிலைப்பாடுகளையும் கொஞ்சம் பார்த்துக்கொண்டால், மகிழ்ச்சியாக இருக்கும்.)

மீதிப்படி நீரும் இளைய அப்துல்லாவும் சேனனும் சேர்ந்துகொண்டு, இலங்கையிலிருந்து கொண்டு உயிர்மை வாசிக்கின்றவர்களுக்கு உயிர்மையிலும் உம்மீதும் ஏற்படுத்தாத வெறுப்பையா நான் ஏற்படுத்திவிட்டேன்? :-(

/அவர்களுக்கு எந்த பதிலும் யாரும் சொல்லவேண்டியதில்லை./
பிறகேன் இந்தப்பதிலோ?

மாலன் said...

அன்புள்ள இரமணிதரன்,

சுவாரஸ்யமான மனிதர்தான் நீங்கள்

கிசுகிசு நடையில் நீங்கள் எழுதிய பதிவு என்னுள் சில கேள்விகளை எழுப்புகிறது. தெரியாமல் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ள வேண்டாம். நிஜமாகவே தெரியாமல்தான் கேட்கிறேன்:

1. உங்கள் வாதம் என்ன? விமர்சிப்பவர் விமர்சிக்கப்படுபவரை விட மேலானவராக இருக்க வேண்டும் என்பதா?

ஆம் என்றால், படைப்பிலக்கியத்தில் பெரிதாக சாதிக்கவில்லை என்பதால் கைலாசபதி மற்றவர்களின் படைப்புக்களை விமர்சிக்கும் தகுதியை இழந்து விடுகிறாரா? வாழ்நாளில் ஒரு வரி கூட இலக்கியமாக எழுதியிராத வாசகன் பரிசுகள் பல பெற்ற எழுத்தாளனின் எழுத்தை விமர்சிக்கும் உரிமை அற்றவனா? கமலஹாசன் அளவு நடிப்பாற்றல் அற்ற ஒரு திரைப்பட பார்வையாளன் அவரது நடிப்பை விமர்சிக்கக்கூடாதா?

2.நீங்கள் ஒரு வேளை, விமர்சிப்பவன் எந்த அம்சத்தை விமர்சிக்கிறானோ அந்த அம்சத்தில் விமர்சிக்கப்படுபவநன விட மேலானவனாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களோ?

அப்படியானால் நீங்கள் இப்போது கவலை கொள்ள அவசியமில்லை. ஏனெனில் நாகூர் ரூமி கதையைத் திருடியதாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. என்வே அவர் அந்த அம்சத்தில் சாருவைவிட மேலானவர். மனுஷ்ய புத்திரன் கண்காட்சி வைப்பதற்காக போட்டோ செஷன் ஏற்பாடு செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக இதுவரை தகவல் இல்லை. என்னுடைய கல்யாண போட்டோ வோ, குடும்பப்படமோ பத்திரிகைகளில் வெளியிட நான் அனுமதித்ததில்லை. பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பிவிட்டு வரலியே வரலியே என அவதிப்பட்டதில்லை. எனவே இந்த விஷயங்களில் நாங்கள் மற்றவரை விமர்சிப்பதைக் குறித்து நீங்கள் தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதில்லை.

3.எனக்கும் முகமூடி போட வேண்டியதில்லை என்னை, என் செய்கையை, என் கருத்தை விமர்சிக்க விரும்பினால் தாராளமாக பெயர் சொல்லி விமர்சிக்கலாம். கிசு கிசு நடையில் எழுத மெனக்கிட வேண்டாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ( தொண்ணூறுகளின் துவக்கத்தில்) அ.முத்துலிங்கம் சென்னையில் ஏற்பாடு செய்த (அட என்ன செய்வது, அதுவும் சென்னையில்தான் நடந்தது) அவரது புத்தக வெளியீட்டு விழாவில், எஸ்.பொ, " இனி எதிர்காலத்தில் புலம் பெயர்ந்தவர்களது எழுத்துக்கள்தான் தமிழிலக்கியத்திற்குத் தலைமை தாங்கும்" என்ற ரீதியில் மேடையில் பேசினார். நான் பேசும் முறை வந்த போது "தமிழகத் தமிழர்கள் திறமை எங்கிருந்து வந்தாலும் அதை வரவேற்று ஆதரித்து, அதைத் தனதாக ஆக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள். நீங்கள் ஒரு ஆறுமுகத்தை அனுப்பி வைத்தீர்கள். அவரை நாவலராக அனுப்பி வைத்தோம்" என்று உதாரணத்தோடு சொன்னேன்.

இதில் என்ன பிழை கண்டீர்கள்? ஆறுமுக நாவலரையும் விபுலானந்தரையும் தமிழகம் அரவணைத்து மகிழ்வில்லையா? ஈழவேந்தன் போன்றவர்கள் எழுதும் நாவலரின் வாழ்க்கைக் குறிப்பில் கூட நாவலரின் ஆற்றல்களைப் போற்றி பரிதிமாற் கலைஞன், திருவிக போன்றவர்களது மேற்கோள்கள்தான் இப்போதும் இடம் பெறுகின்றன. நாவலரைக் குறித்து நீங்கள் எவ்வளவு பெருமை அடைகிறீர்களோ அதே அளவு நாங்களும் பெருமை அடைகிறோம்.

எஸ். பொ அன்று சொன்ன ஆருடம் பொய்த்துவிட்டது. அதை அவரே திசைகள் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். எஸ்.பொ.வின் அபிப்பிராயங்களையெல்லாம் நான் உச்சந் தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடவில்லை என்பதனால் எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட விரோதங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு. அவர் எனது நண்பர்களிலே ஒருவர். அவரும் அவர் மனைவியும் என் இல்லத்திற்கு வந்து விருந்துண்டதுண்டு. அவர் மகன் மறைந்த துயரத்தை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டதுண்டு. அவர் பதிப்பகத்தின் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்ததுண்டு.அவரை நான் பேட்டி காண்பது இது முதன் முறையல்ல. இதையெல்லாம் அவர் அவரது சுயசரிதையிலேயே எழுதியிருக்கிறார். சரிபார்த்துக் கொள்ளலாம்.

விடுதலைப்புலிகள் விஷயத்தில் இந்து சறுக்கிவிட்டதென்றே வைத்துக் கொள்வோம்.அதற்காக அதன் 125 ஆண்டு வரலாறுமே பிழைபட்டதாகிவிடுமா? அதைக் குறித்து பேசுவதும் எழுதுவதும்கூடத் தவறாகிவிடுமா? இந்திய இதழியல் வரலாற்றில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துவிற்கு ஒரு இடம் உண்டு.

இந்துவின் 125வது ஆண்டு விழாவை ஒட்டி திசைகள் வெளியிட்ட கட்டுரைக்கு வந்த விமர்சனமும் அதற்கான பதிலும் அடுத்த இதழிலேயே வெளியிடப்பட்டன. ஒளித்து வைக்கப்பட்டன என்பது அப்பட்டமான பொய்.

இன்றைய வணிகப் பத்திரிகைகளின் ஸ்டார் எழுத்தாளர் விவேக் என்று சொல்வதற்கு பயம் எதற்கு? இதைவிடப் பெரிய விமர்சனங்களை அஞ்சாமல் செய்தவன் நான்.

உலகில் உங்கள் கருத்துக்கு மாற்றாக, முரணாக ஒரு கருத்து இருக்கமுடியும். அந்தக் கருத்தை நீங்கள் நிராகரிக்கலாம்.ஏற்கலாம். விவாதிக்கலாம். ஆய்ந்து பார்க்கலாம். ஆனால் எள்ளல் எதற்கும் பயன்படாது.

Vaa.Manikandan said...

அறிவிற்ச்சிறந்த பெயரிலி,
வாழ்த்துக்கள்.அது என்னயா உனக்கு எழுத்தாளர்கள் அனைவரும் மீதும் அளவுகடந்த கோபம்?

இலங்கையில் இருந்து வந்த படைப்பாளிகள்(இளைய அப்துல்லா ,எஸ்.பொ) எல்லோரும் நல்ல பெயர் எடுத்துவிட்ட நிலையில்,உம்மால் இயலவில்லை என்னும் அங்காலாய்ப்பா?

அதற்க்கு கொஞ்சம் கற்பூர வாசனை தெரிய வேண்டும்.மன்னிக்க.இலக்கிய வாசனை தெரிய வேண்டும்.
விளம்பரம் தேட இது கூட நல்ல உத்தி தான்.உம்மை கழுதை என்று சொல்ல வரவில்லை.

திரு.மனுஷ்யபுத்திரன்,இவர் போன்ற வீணர்களுக்கு பதில் எழுதும் நேரத்தில் ஒரு நல்ல கவிதை எழுதலாம்.

சூரியனை நோக்கி குறைக்க எப்போதும் சிலர் இருப்பர்.

பெயரிலி...என் முகவரி வேண்டுமா?

SnackDragon said...

மனுஷ்யபுத்திரன் அனானிமஸ் என்பதை அனாமதேயம் என்றாரா? இல்லை பெயரிலி எனபதை அனாமதேயம் என்றாரா என விளங்கவில்லை,
அப்படி பெயரிலியை சொல்லியிருந்தாரெனில் பார்க்க:
http://agingwanderer.blogspot.com/
http://www.peyarili.blogdrive.com/
மற்றபடி விவாதம் வெகு வெளிப்படை, தேவைப்பட்டால் நுழைகிறேன்.

SnackDragon said...

வா மணிகண்டன்,
நீங்கள் எழுதியவற்றிலே , ஒரு வரி விவாதத்துக்கு சம்பந்தமாய் எழுதியுள்ளீர்களா என்றால் உங்களை பொருட்படுத்தலாம், அவரவருக்கும் அவருக்கு உகந்த எழுத்தாளர்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும், உங்களுக்கு மனுஷ்யபுத்திரன் போல!!! இப்படி குறைப்பதை விட்டு , உபயோகமாய் ஏதாவது எழுத முயற்சி செய்யுங்கள்.

SnackDragon said...

//விடுதலைப்புலிகள் விஷயத்தில் இந்து சறுக்கிவிட்டதென்றே வைத்துக் கொள்வோம்.//

மாலன், இதைத்தான் சரியான கவர்-அப் என்று சொல்வது. இணையத்திலே எத்தனையோ முறை
-தி ஹிந்து வின் ஈழத்தமிழர்கள் குறித்த திட்டமிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் வந்துவிட்டன. அப்போதெல்லாம் , சும்மா இருந்து விட்டு , இப்போது மேம்போக்காக இப்படி ஜல்லி அடிப்பது , உங்களை போன்ற பெரிய மனிதர்களுக்கு அழகில்லை. நீங்கள் உங்கள் நண்பர் ராமுக்கு உணமையான நண்பர் என்றால், இணைய விவாதங்களை அவரிடம் கொண்டு சேர்த்து அவரது நிலைப்பாட்டை அறிய முயற்சிக்கலாம்.

-/பெயரிலி. said...

/உங்கள் வாதம் என்ன? விமர்சிப்பவர் விமர்சிக்கப்படுபவரை விட மேலானவராக இருக்க வேண்டும் என்பதா?/

இல்லை. ஆனால், சுந்தரராமசாமி சிறுபத்திரிகைக்கு; விவேக் குங்குமத்துக்கு என்று சொல்லும்போது, எனக்குத் தோன்றுவது என்னவென்றால், ஜெயமோகன் என்ற ஆசாமி பண்ணாத கோமாளித்தனத்தினையா சுந்தரராமசாமி என்ற சாமி பண்ணியிருக்கின்றது? சாகுல் ஹமீட் அதை வசதியாக மறந்துவிடுகின்றார்.

கிசுகிசு பாணியில் எழுதப்பட்டிருந்ததாகத் தோன்றியிருந்தால், மன்னிக்கவும். எஸ். பொ.-லேனா.தமிழ்வாணன் - மாலன் குறித்து2003 இலேயே பெயர்களுடன்http://agingwanderer.blogspot.com இலே எழுதியிருக்கின்றேன். சொல்லப்போனால், திசைகளிலே நீங்கள் எஸ்பொவினை நோக்கிவீசிய கேள்விகளின் தன்மை எந்தளவு திட்டமிட்டவிதத்திலே உங்களின் "நாவலர்" பட்டத்து வாதத்தினை அவரூடாகவே உடைக்கும்விதத்திலே தொகுக்கப்பட்டிருக்கின்றது என்பது குறித்தும் எழுதியிருக்கின்றேன். சிலவேளை செப் 2003 இலே மதி கந்தசாமி வலைப்பதிவுகள் குறித்து திசைகளிலே எழுதிய கட்டுரையிலே உருப்படியில்லாத என் வலைப்பதிவு சுட்டப்பட்டிருக்கவில்லை என்ற காரணத்தினாலே, நீங்கள் அதைக் காண வாய்ப்பிருந்திருக்கமுடியாது :-) ஆனால், கிசுகிசுவிலே உங்களைப் பற்றி எழுதுமளவுக்கு உங்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும், என்னைப் பற்றி தப்பாக நீங்களோ வேறு யாருமோ எண்ணிவிடக்கூடாதே என்ற பயமோ வேறெந்த இழவோ என்னிடமில்லை. சொல்லப்போனால், நீங்கள் புளோரிடாப்பல்கலைக்கழகத்திலே இருந்தபோது, கொடுத்த செவ்வி ஒன்றைப் பற்றியும் பெயரைச் சொல்லித்தான் எழுதியிருக்கின்றேன். தமிழகப்பதிப்பாளர்கள், விமர்சகர்கள், படைப்பாளிகளிடம் நல்ல பெயர் வாங்கியே காலடி நாய்க்குட்டியாக நிற்பதே வாழ்வின் இலட்சியம் என்றென்னும் இலங்கைப்படைப்பாளிகளிலே ஒருத்தனோ வேண்டாம் படைக்கிறவன் பிராண்டுகிறவனிலே ஒருத்தனாகவோ நான் இல்லையென்பதாலே, இந்தக் கிசுகிசு எல்லாம் எனக்குத் தேவையில்லை. வேண்டுமானால், தமிழக மாதப்பத்திரிகைகளிலே இலங்கைப்படைப்பாளிகள் என்ற ரீதியிலே பத்தி எழுதுகின்றவர்களுக்குத் தேவையாக இருக்கலாம். (ஹ்ம்! காலச்சுவட்டிலே சாகுல் ஹமீட் அவர்கள் இருந்தபோது, சல்மா என்கிற படைப்பாளி இலங்கைபோய் வந்தபோதுகூட, அதற்கு கைடுக்குறிப்பு சேரன் என்கிறவர் கொடுத்தது மாதிரி காலச்சுவட்டிலே அவர் பயணக்குறிப்புகள் வந்திருந்ததாக ஞாபகம் :-))

இலங்கைத்தமிழர்கள்-இந்து குறித்து இங்கே நீங்கள் சொல்வதற்கும் குறிப்பிட்ட ஒருவருக்கு நீங்கள் தனிப்பட்டவிதத்திலே பதில் அளித்ததற்கும் வித்தியாசம் உண்டு. இந்து சறுக்கியது என்று நீங்கள் ஒத்துக்கொள்ளவேயில்லை. (இது பற்றியும் உங்கள் பெயருடன் கிசுகிசுபாணியில்லாமல் எழுதியிருக்கின்றேன்). ஆனால், சம்பந்தப்பட்ட மற்றவரின் அனுமதியில்லாமல், நான் எதையும் பேசக்கூடாது. அது முறையல்ல. அங்கே நான் பிழை இழைத்திருக்கின்றேன். அதனாலே, அந்த ஒருவிடயத்திலே, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மேற்கொண்டு எதையும் பேசவிரும்பவில்லை. சம்பந்தபடாமல் இன்னொன்றையும் கிசுகிசுபாணியில்லாமற் சொல்லிவிடுவது நல்லது; முத்துலிங்கம் தமிழகப்புத்தவியாபாரிகளுக்காகக் கூட்டம் கூட்டுவது வியப்பொன்றுமில்லை ;-) டிஜேயின் கட்டுரை அண்மையிலே வந்தவற்றிலே மிகவும் வெளிப்படையானது. உருத்திரமூர்த்தி சேரன் என்ற பல்லக்குத்தூக்கி பற்றியும் அந்தக்கட்டுரையிலே டிஜே பேசியிருந்திருக்கலாம். இலங்கையிலே தார்மீக அங்கீகாரம் இழந்த எழுத்தாளர்களெல்லாம் இலங்கை எழுத்தாளர்கள் என்று (நாட்டைவிட்டுப்போய் நாற்பது வருசமானபின்னாலுங்கூட) என்ற அங்கீகாரத்தினைத் தமிழ்நாட்டிலே பெற அடிக்கின்ற கழைக்கூத்தாடித்தனம் தொடர்ந்து அவர்களைப் பார்க்கின்றவர்களுக்குப் புதிதல்லவே.

இவை பற்றிவிபரமாக இங்கே எழுதவிரும்பவில்லை. ஏனெனில், இவை மேலே இருக்கும் சங்கதி குறித்ததைவிலக்கி வேறேதோ பேசப்புறப்படும். ஆனல், உங்களது எதிர்வினை குறித்து விபரமான பதிலை எனது பதிவிலே விபரமாக எழுதுவேன்.

மணிகண்டன், மீண்டும் நாலாண்டு முன்னான போரம்ஹப் சண்டையைத் தொடங்கவிரும்பவில்லை; அந்த நேரத்திலே மலேசியப்பெரிசுக்காகமாய்ந்துகொண்டு வந்தவர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன்.

/இலங்கையில் இருந்து வந்த படைப்பாளிகள்(இளைய அப்துல்லா ,எஸ்.பொ) எல்லோரும் நல்ல பெயர் எடுத்துவிட்ட நிலையில்,உம்மால் இயலவில்லை என்னும் அங்காலாய்ப்பா?/
அதேதான்; அப்பாடா உமக்கு ஒருவருக்காவது விசயம் புரிகின்றதே. தமிழகத்தின் குறிப்பிட்ட சில படைப்பாளிகள், விமர்சகர்கள், பதிப்பாளர்களிடம் (அட! இவை மூன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன?) நல்ல பெயர் எடுப்பது எப்படி என்பது தெரியாமலே இத்தனைகாலம் இருந்துவிட்டேனே :-( அதுபோகட்டும்; நல்ல பெயர் எடுத்த, இளைய அப்துல்லா, எஸ்.பொ. எழுதியவை குறித்து தலைக்கு மூன்று குறிப்புகளாக, நீர் இங்கே எழுதினால், எந்தளவு அவர்கள் எடுத்த பெயர் உம்மைப்போன்ற

இப்போதெல்லாம் கவிதை என்பது கச்சாப்பொருளிருந்து ஜிகினாக்காதணி உற்பத்தி செய்வதுபோல; எவரும் எழுதிவிட்டுப்போகலாம். ஆனால், நீங்கள் சொல்லும் ஒன்று உண்மை; நல்ல கவிதை என்பது கஷ்டம். கஷ்டமென்றால், மஹாகஷ்டம் ;-) முக்காவாசிக்குமேலே டெம்பிளேட் கவிதைகள்தான்.

வாசலிலே பூச்சியைப் பொத்திக்கொண்டிருக்கிறேன்.
பேசாமால் மா இடித்துக்கொண்டு நிற்கிறாய்.
பேசமுயல்கிறேன்;
பூச்சி பறந்துபோகிறது.
இடித்த மா இடியப்பம் ஆகிறது.
விரிந்த கைகளில்
பூச்சி எச்சம் இன்னும்
பொசுக்கென்று மணக்கிறது.

இந்தக் கவிதை உருவான டெம்பிளேட்டிலே இன்னொரு தோசை/சப்பாத்தி சுட்டால்,

வாய்க்காலிலே மீன் பிடித்துக்கொண்டிருக்கிறேன்
வரம்பிலே ஊன்றிக்கொண்டிருக்கிறாய் நாற்று;
நீந்தநினைக்கிறேன்.
மீன் விலகிப் போனது
நட்டநாற்று நற்கதிராகிறது.
போட்ட தூண்டிலில்
நாற்றுப்பால் இன்னும்
நாறுகிறது பச்சையாய்.

இப்படியே ஆழமும் விரிவும் தேடிய நுட்பம் தட்பவெப்பமும் நிறைந்த கவிதைகளை பஸ் ரிக்கெட் (டிக்கெட்), கழிப்பறைக்கைதுடைதாள், பலசரக்குக்கடை எனப்படும் மளிகைக்கடை பில்லு, பிரிண்டரிலே எஞ்சிக்கிடக்கும் கடைசித்தாள் என்பதிலே எழுதிக்கொண்டு தொகுத்தால், நல்ல பெயர் எடுப்பது வல்லிய காரியமில்லை; வானம் வசப்படும் :-)

இப்படியாகப் மூன்றுநாட்களுக்கு ஒரு க-விதை விழுந்து. அயல்நாட்டிலே ஆறுமாதச்சம்பளத்திலே ஆறு சதவீதம் சேமித்தால், முன்னுரைக்கு ஒருத்தர், இணையத்தில் முகவுரைக்கு ஒருத்தரென்று ஆண்டுக்கு இரண்டு கவிதைத்தொகுதி எந்தக்கச்சடா கவியும் தாவித்தாவிப்போட்டு நல்ல பெயர் எடுக்கலாம். ஐயோ ஐயோ மறந்துவிட்டேன்; விழா விழா; மைக்கைப் பிடிக்கவா மஹாபானுபவர்கள் இல்லாமற் போச்சு; என்ன, பிடித்தவர் கையிலிருந்து பிடுங்கிறதுதான் கஷ்டம் :-( இப்படி நாலு தொகுதி கவிதை போட்டால், நாலாம் வருசம், நாமே முன்னுரை, முகவுரை, முகத்திலே உதை (இதை அடுத்தான் கவிதைமீது விமர்சனம் என்றும் சொல்லலாம்) என்று எழுதும் பெர்ய விமர்சகர், படைப்பாளி, படையோ படையென்று வாரிச்சொறிந்துகொள்ளலாம். நல்ல பெயர் எடுப்பதொன்றும் கஷ்டமான காரியமில்லை, கண்டீரோ? (இதுக்குமேலே, உமக்குப் பதில் இனி இல்லை; வழக்கம்போல, அடிநுனி தெரியாமல், கத்திக்கொண்டிரும்.)


/சூரியனை நோக்கி குறைக்க எப்போதும் சிலர் இருப்பர்/
அது குறைக்க இல்லை, குரைக்க. ;-)

-/பெயரிலி. said...

புதியகனா,
முக்கால்வாசி மொழிபெயர்ப்புச்சஞ்சிகையான உயிர்மையினை அண்மைக்காலத்திலே தொடர்ந்து கவனித்துக்கொண்டு வந்தீர்களென்றால், இது தனியே சேனன் எழுதிய ஒரு கட்டுரை என்பதாக மட்டும் கொள்ளமுடியாதென்பதைக் கவனிக்கலாம். இளைய அப்துல்லாவின் குறிப்புகள் (இளைய அப்துல்லா போன்று பல முஸ்லீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளாலே விரட்டப்பட்டத்தினையும் அவர் அக்குறணையிலே வாழ்ந்தபோது அந்நிகழ்வு பற்றி எழுதிய கவிதைகளையும் அவற்றிலிருக்கும் உண்மையையும் சோகத்தையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால், இலண்டனிலே போய் தொலைக்காட்சியிலே தொழிபுரிந்துவிட்டு, மீண்டும் கொழும்பிலே போயிருக்கும் இளைய அப்துல்லா, திரும்ப முஸ்லீங்கல் யாழ்ப்பாணம் போனது பற்றி எதுவுமே எழுதுவதுமில்லை;சாகுல் ஹமீட் அது பற்றி ஏதும் பிரசுரிப்பதுமில்லை. பிரகு விமல் குழந்தைவேலுவின் வெள்ளாவி பற்றிய விளம்பரத்திலே (பக்கத்திலே இளைய அப்துல்லாவின் கவிதைத்தொகுதி பற்றிய விளம்பரமும் உண்டு) விடுதலைப்புலிகளாலே தடைசெய்யப்பட்ட புத்தகம் என்ற ஒற்றைப்படை விளம்பரத்தினைப் பார்க்கின்றவர்கள் (குறிப்பாக, தமிழகத்திலே; ஷோபா சக்தி, எஸ். புஸ்பராஜா போன்றோரின் புத்தகங்கள் வந்த நிலையிலே இந்த விளம்பரம் வெறும் விற்பனையைக் குறிவைத்த விளம்பர உத்தி என்றே எனக்குத் தோன்றுகின்றது) என்னத்தை நினைப்பார்கள் என்று சொல்லத்தேவையில்லை. விடுதலைப்புலிகள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதெல்லாம் வேறாக இருக்கட்டும்; ஆனால், இந்த நூல் அரசியல் காரணமாக விடுதலைப்புலிகளாலே தடை செய்யப்பட்டது என்ற பார்வையை ஏற்படுத்துவதிலே மும்முரமாக இருக்கின்றது விளம்பரம். விமல் குழந்தைவேலு, இலண்டனிலே புத்தகத்தினை வெளியிட்டபோது, மற்றவர்களினாலே விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் முன்னாலேயே வெளியிட்டிருக்கின்றார். மற்றும் வெள்ளாவி தம் சமூகத்தினை இழிவு படுத்துவதாக சலவை செய்கின்ற சமூகம் சுட்டியதாலே அது நிறுத்தப்பட்டுப் பிறகு வெளியிடப்பட்டதாக இலங்கையிலிருந்த நண்பர்கள் சொல்கின்றார்கள். இங்கே உயிர்மை ஒற்றைவரியிலே 'விடுதலைப்புலிகளாலே தடை செய்யப்பட்ட புத்தகம்" என்று விளம்பரப்படுத்துகின்றது. எதற்கும் சஞ்சிகையைத் தொடர்ந்து வாசித்து வாருங்கள். நான் சொல்வது என் பார்வையிலே தோன்றியதே. அது தவறாகவும் இருக்கலாம்.

-/பெயரிலி. said...

மேலே உள்ளவற்றிலே இருக்கும் தட்டான்களை மன்னிக்கவேண்டும். ஆனால், எதுவுமே caps தட்டான் அல்ல. கீழ்நிலைத்தட்டான்களே (ல், ர)

enRenRum-anbudan.BALA said...

//மொழிப் போராட்டம், வெண்மணிப் படுகொலை, நெருக்கடி நிலை, தர்மபுரியில் நக்சல்பாரி இளைஞர்கள் மீது எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்திய சட்டவிரோத கொலைகள், சாதிக் கலவரங்கள், தலித்துகள் மீதான படுகொலைகள், இந்தியா முழுக்க இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது நடத்திவரும் தாக்குதல்கள்,//

மனுஷ்யபுத்ரன்,

தாங்கள், சிறுபான்மையினத் தீவிரவாதிகள் காஷ்மீர் பண்டிட்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை ஏனோ மறந்து விட்டீர்கள்? ஏனோ நினைவுறுத்த வேண்டும் எனத் தோன்றியது!

நல்ல பதிவு. தொடர்ந்து பதியுங்கள், சில கவிதைகளும்!

மாலன் அவர்களின் தமிழ் எழுத்தாளர்களின் சமூக பிரக்ஞை குறித்த கருத்துக்கள், நூற்றுக்கு நூறு சரி! அருமையாக எடுத்துக் காட்டியிருக்கிறார். பெயரிலிக்கு திரு.மாலன் தந்த மறுமொழியும், அது சொல்லப்பட்ட விதமும் மிக நேர்த்தி!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

-/பெயரிலி. said...

/பெயரிலிக்கு திரு.மாலன் தந்த மறுமொழியும், அது சொல்லப்பட்ட விதமும் மிக நேர்த்தி!!!/


பாலா இருக்கட்டும். ரோஸாவசந்த் போல ஆள்தான் நான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். ;-) பொதுவாக வலைப்பதிவுகளிலே நீங்கள் எந்தக்குழு ஆளென்பது இத்தனைநாட்கள் உங்கள் பதிவுகளையும் வாசிப்பதிலே தெரிந்திருப்பதாலே, மாலனின் பதில்களிலே இருக்கும் நேர்த்தி உங்களைப் போன்றவர்களுக்குப் புரிபடும் என்பது எனக்குத் தெரியும். (வேண்டுமானால்இதற்கு முன்னைய மனுஷ்யபுத்திரனின் பதிவிலே சுதர்ஸனுக்கு ரோஸாவசந்த் கொடுத்திருக்கும் கடைசிப்பதிலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்).

ஆனால், எஸ். பொ. பற்றி உங்களுக்கு என்ன தெரியுமென்பதையும் இங்கே குறித்தால், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். கட்டாயமென்பதில்லை. நேர்த்தி என்பது சொல்கின்ற விதத்தைமட்டும் சார்ந்தததல்ல, சொல்லப்படும் விடயத்தினையும் சார்ந்தது.ஒவ்வொருவரும் அவரவருக்கு விருப்பானதைப் பிறர் சொல்கைடிலே பாராட்டியும் விருப்பற்றதைச் சொல்கையிலே/சொல்லாமல் விடுகையிலே அதைக் குற்றம்சுட்டியும் இருக்கின்றோம். ஆனால், முக்கியமானது எப்படிச் சொல்லப்பட்டதென்பதல்ல; ஏன் சொல்லப்பட்டதென்பதுதான் என்று நினைக்கிறேன்.

இதற்குமேலே சாகுல் ஹமீதின் பதிவிலே எதையும் எழுதவிரும்பவில்லை. அச்சுப்பதிவிற்கு முதன்மை கொடுத்து இணையத்திலே பொழுதுபோக்கும் பதிவாளர்கள் பதிவுகளிலே எதுவும் குறிப்பதில்லை என்ற சுயகட்டுப்பாட்டை மீறியதற்கு வருந்திக்கொண்டு விலகிக்கொள்கிறேன். ஆனால், இது தொடர்பான பதிவுகள் இருக்கும் (அனோனிமஸாக அல்ல; ஆனால், சாகுல் ஹமீட் என்ற மனுஷ்யபுத்திரன் அனானிமஸ் இல்லாதவிடத்து, -/பெயரிலி.யும் அனோனிமஸ் இல்லை என்ற எடுகோளைக் கொள்கிறேன்].

Anonymous said...

மனுச்யரே - எதிராளிய பாட்டம் டு டாப் அளந்து வைத்திருக்கிறார் பெயரிலி. யார் எந்த சைசு என்றும் சொல்வார். அவர்ட்ட சண்டைபோட்டா தமிழிணையத்தில் தாக்குபிடிக்க முடியாது. அரைகுரையிலிருந்து எடுபிடிவரை தோழனிலிருந்து பொடிச்சிவரை உம்மை தாளித்துவிடுவார்கள். டிசேவாக டிசே பக்கவாத்தியமாக ரோசாவசந்து கைதட்ட சுந்தரமூர்த்தி தங்கமனி கூட்டனி வரும். மார்க்சிய விளக்கத்துக்கு ரவி சீனிவாசன் வருவார். உம்மை நாறடித்துவிட்டுதான் ஓய்வார்கள். உமக்கு இணையமெல்லாம் எதுக்கு? பிரபலங்களும் பத்திரிகைகளும் இணையத்தை கண்டுகொள்வதில்லை என்ர ஒப்பாரியை பொய்யாக்க வந்தீரா. இந்த வைரசுகளுக்கு மாற்று மருந்துல ப்ரியமில்ல. பொழப்பு கெட்டுடும் என பயப்படுதுகள். இப்படிதான் அட்டாக் பண்ணும்கள். இங்க எழுதற நேரத்துல கவிதை எழுதும்வே. உயிர்மையை பாரும்வே.

Anonymous said...

பதிவாளர்களிலே இந்த ண்/ன் சிக்கல் உள்ளவர்கள் அநேகரில்லை என்று மனுஷ்யரின் ஸைட்கிக்குக்குத் தெரியாதா? :-)

நானும் அனானினமஸாம் ;-)

Anonymous said...

Dear Mr. Sahul Hameed

You listed a long list of atrocities starting from Venmani massacre to JJ's arrogance. But I could not see any mention about Bombay blasts, coimbatore blsats and Godhra (ofcourse it was a self immolation by those women and kids, so you'd have omitted). Your non-listing of those mass murders may not be intentional, I believe. Dont say I am throwing stone from dark. I need to be in dark because I need some safety too from the growing world of intolerance.

Anonymous said...

"சங்கராச்சாரியார் விவகாரம் ஒரு குற்றம் தொடர்பான பிரச்சினை. இதற்கு பின்னிருக்கும் நோக்கங்கள் இன்னும் யாருக்கும் சரிவரத் தெரியாத நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் என்ன நிலைப்பாடுகளை எடுப்பது?அசட்டுத்தனமான நிலைப்பாடுகள் எடுப்பது ஜனநாயக உரிமை என்றாலும் எல்லா நிலையிலும் அந்த உரிமையை பயன்படுத்த வேண்டுமா"
கேள்விகள்
1, அப்படியானால் சாரு இது பற்றி எழுதியதை உயிர்மையில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன. அதில் அவர் எழுதியவை எந்த ரக இதழியல் அல்லது இலக்கியத்தில் சேர்த்தி ?
2,எல்லா விஷயங்களிலும் எல்லாத் தகவல்களையும், காரண காரியங்களையும் அறிந்து, தெளிவுற்ற பின்னரே எழுதுகிறீர்களா. கருணாநிதி கைது முதல் சுனாமி அரசியல் வரை நீங்கள் எழுதியுள்ள கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை இந்த அளவு கோல் கொண்டு அளக்கலாமா?
3,சு.ரா எழுதியது உளரல் என்றால் உங்கள் பதிவு மகா அபத்தம், பெரிய உளறல். இரண்டிற்கும்
பெரிய வித்தியாசம் இல்லை.பாய்ஸ் பட விஷயத்தில் நீங்கள் எடுத்த நிலைப்பாட்டினை நினைவுறுத்த விரும்புகிறேன். சுருக்கமாகச் சொன்னால் இங்கு தன்னலமே பொது நலமாய் வெளிப்படுத்தப்படுகிறது.இதில் நீங்கள், ஜெ.மோ,சு.ரா எல்லாருமே ஒன்றுதான். எதையும் விற்கும் சாமர்த்தியம் இருந்தால் போதும்.அது உங்களில் சிலரிடம் அதிகம், சிலரிடத்தில் குறைவு. மற்றபடி காமராஜர் மொழியில் சொன்னால் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.
4,பெயரலிக்கு இணைய நக்கீரன் என்று பட்டம் தரலாம்.

வசந்தன்(Vasanthan) said...

//பொழப்பு கெட்டுடும் என பயப்படுதுகள்.//
யாருடைய பொழப்பு? யார் பயப்படுவது?
கொஞ்சம் சொல்வீர்களா?

ROSAVASANTH said...

அன்பின் பெயரிலி,

என்னை எதற்கு இங்கே இழுக்கிறீர்கள்? ஏற்கனவே எதற்கும் நேரமில்லாமல் தவித்து கொண்டிருக்கிறேன். இதில் இன்னும் ஒரு வாரத்தில் இங்கே வரப்போகும் 'ஆத்மாநாமை' முன்னிட்டு பல வேலைகள். இதற்கு நடுவில் ஆபிதீன் வேறு பெயர் சொல்லாமல் என்னை திட்டிவிட்டு போக, என்னுள் இருக்கும் ஈகோவும் 'தார்மீகமும்' பதில் எழுதியாக வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இதில் இங்கே நான் எதற்கு?

பாருங்கள், மனுஷ்யபுத்திரன் சொன்னமாதிரி, உண்மையான அர்தத்தில் அபிப்ராயங்களின் உலகில் எந்த இடமும் இல்லாத 'இருட்டில் கல்லெறிந்துவிட்டு ஓடும், வெறுப்பை உண்டு வாழும் அநாமதேய புழு' ஒன்று என்னை உங்கள் 'ஜால்ரா'வாக ஆக்கியிருக்கிறது, நானும் நீங்களும் மோதிகொள்ளும் சந்தர்பங்கள் பக்கவ்வாட்டிலேயே கிடக்கும்போது.

மனுஷ்யபுத்திரன் எழுத தொடங்கியிருப்பது வலைப்பதிவிற்கு ஆரோக்கியமானது. விமர்சனங்கள் இருந்தாலும், அதை முன்வைத்தாலும் மனுஷ்யபுத்திரன் இங்கே எழுதுவது முக்கியமானது என்றே நினைக்கிறேன். இந்த விவகாரத்தில் எனக்கு கருத்து இருந்தாலும் அதை எழுதுவது முக்கியமில்லை என்று நினைக்கிறேன்.

(நீங்கள் என் பெயரை குறிப்பிட்டது பெரிய பிரச்சனையில்லை. ஆனாலும் விவாதத்தில் கலந்துகொள்ள முடியாததையும், அது முக்கியமில்லாததை சொல்லவுமே இந்த பின்னூட்டம்.)

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

Dear இரமணிதரன்,

//பாலா இருக்கட்டும். ரோஸாவசந்த் போல ஆள்தான் நான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். ;-)//

நீங்கள் கூற வந்தது புரியவில்லை! ஆனால், ரோசாவின் பதிவுகளை விரும்பி படிக்கிறேன். சில நேரம் அவருக்கு ஒவ்வா கருத்துக்களையும் சொல்லியிருக்கிறேன். அவரையே கேளுங்கள்!// பொதுவாக வலைப்பதிவுகளிலே நீங்கள் எந்தக்குழு ஆளென்பது இத்தனைநாட்கள் உங்கள் பதிவுகளையும் வாசிப்பதிலே தெரிந்திருப்பதாலே, மாலனின் பதில்களிலே இருக்கும் நேர்த்தி உங்களைப் போன்றவர்களுக்குப் புரிபடும் என்பது எனக்குத் தெரியும். //

நான் எந்தக் குழு ஆளும் கிடையாது ;-) நீங்கள் திடமாக நம்பலாம்! உங்கள் பதிவுகளையும் படித்திருக்கிறேன்! ரசித்திருக்கிறேன். தற்சமயம் மனதில் பட்டதை கூறினேன். அவ்வளவு தான். என் பதிவுகளை தாங்கள் வாசிப்பதற்கும், மாலனின் பதில்கள் நேர்த்தி என நான் கூறியதற்கும் உள்ள தொடர்பு என்ன என்று சத்தியமாக விளங்கவில்லை :-(

மேலும், சொல்லப்பட்ட விதத்தை நேர்த்தி என்றேன். அனைத்து கருத்துகளையும் அல்ல. மேலோட்டமாகத் தான் கூறினேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சில விடயங்களைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. அதனால் தான், நீங்கள் கூறியதைப் பற்றியும் எதிர்த்தோ/ஆதரித்தோ எதுவும் கூறவில்லை.

என்றென்றும் அன்புடன்
பாலா

Thangamani said...

யாரோ ஒருவர் விரும்பி அழைத்ததற்காக வரவேண்டியதாயிற்று. என்னுடைய பெயர் தங்கமணி (தங்கமனி) அல்ல. மற்றபடி மிகவும் நகைச்சுவையான விசயம் மாலனின் //விடுதலைப்புலிகள் விஷயத்தில் இந்து சறுக்கிவிட்டதென்றே வைத்துக் கொள்வோம்.// சறுக்கியவர்கள் அங்கேயே கிடக்கவேண்டுமென்பதில்லை. திரும்ப எழுந்திருக்கலாம். அப்படி எழுந்திருக்கவில்லை என்றால் அது சறுக்கல் அல்ல; சதியென்று கண்டோம்.
அப்புறம் சமூகபிரக்ஞை இல்லாமல் எழுத்தாளர்கள் இருப்பது பற்றி எழுதியது, அப்படி எழுதினால் அது இலக்கியமே அல்ல என்று இங்கு எழுதிவந்தவர்கள் (இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்கள்) சொல்லவில்லையா? ஏன் இதே சுரா அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்க எழுத்துகள் எல்லாம் இலக்கியமே அல்ல என்ற கருத்தைக்கொண்டிருக்கவில்லையா?